துணை முதல்வரானார் பவன் கல்யாண் மக்களவை தேர்தலோடு ஆந்திர மாநி லத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடை பெற்ற நிலையில், வாக்கு எண் ணிக்கை முடிவில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி 164 தொகுதிகளை (தெலுங்கு தேசம் - 135, ஜன சேனா - 21 மற்றும் பாஜக - 8) கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றியது. ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி எதிர்க்கட்சிக்கான அந்தஸ்தையும் இழந்தது. இந்நிலையில், செவ்வாயன்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக் கூட்டத்தில் ஆந்திர மாநிலத்திற்கான புதிய முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், புதனன்று விஜயவாடா புறநகர் பகுதியான கண்ணாவரத்தில் நடைபெற்ற விழாவில் முறைப்படி, 4ஆவது முறையாக ஆந்திர முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு. துணை முதல்வராக ஜனசேனா கட்சியின் தலை வர் பவன் கல்யாண் பதவியேற்றார். இரு வருக்கும் ஆளுநர் நசீர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சந்திரபாபு நாயுடு வின் மகன் நாரா லோகேஷ் உட்பட 24 பேரும் ஆந்திர மாநிலத்தின் புதிய அமைச் சர்களாக பொறுப்பேற்றனர். பதவி யேற்பு விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, நிதின் கட் காரி, முன்னாள் துணை ஜனாதி பதி வெங்கையா நாயுடு, நடிகர்கள் ரஜினி காந்த், சிரஞ்சீவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.