சென்னை,டிச.5- சென்னை உயர்நீதி மன்றத்தில் மதுரையைச் சேர்ந்த சலிமா பானு தாக்கல் செய்த பொது நல வழக்கில், “சாலை விபத்தில் பலியான எனது மகன்க ளுக்கு இழப்பீடு கோரி மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்தேன். ஆனால் விபத்து வழக்கு தொடர்பான ஆவணங்களுடன் மனு தாக்கல் செய்யக் கூறி, மனுவை தீர்ப்பாயம் திருப்பி அளித்து விட்டது. குறிப்பிட்ட அந்த ஆவணங்களை வழங்கக் கோரிய போது, காவல் துறையினர் லஞ்சம் கேட்ட னர். ஆவணங்களை பெற முடியாததால் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. இதேபோல பல விபத்து வழக்குகளில் காவல் துறையினர் நடந்து கொள்கின்றனர். எனவே, அப்பாவி பொதுமக்கள் வழக்கு ஆவணங்களை பெறும் வகையில், விபத்து வழக்குகள் தொடர்பான ஆவணங்களை காவல் துறையின் பிரத்யேக இணையதளத்தில் பதி வேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கர வர்த்தி அமர்வு, மூன்று வாரங்களில் பதிலளிக்கும் படி தமிழக டிஜிபி உள்ளிட்ட காவல் துறையினருக்கு உத்தரவிட்டு, விசார ணையை தள்ளிவைத்தது.