தாமோர், (ஜார்க்கண்ட்), நவ.1- ஜார்க்கண்ட் மாநிலம் தாமோரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் பேரணி நடைபெற்றது. பேரணியை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் துவக்கி வைத்தார். முன்னதாக அவர் ஜார்க்கண்ட் மக்களின் நாயகன் பிர்சா முண்டாவின் சிலைக்கு மாலையணி வித்தார். பேரணியில் மாநிலச் செயலா ளர் பிரகாஷ் விப்லவ், சுரேஷ் முண்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பேரணியில் உரையாற்றிய பிருந்தா காரத், “1782-ஆம் ஆண்டு முதல் 1821-ஆம் ஆண்டு வரை பழங்குடி யின மக்களும் மற்றவர்களும் ஆங்கி லேய ஆட்சியாளர்களுக்கும் அவர் களின் கைப்பாவைகளுக்கும் எதிராகப் போராடிய ‘தாமோர் புரட்சிக்’ களத் திற்கு வந்திருப்பதில் பெருமை கொள்கிறேன்” என்று கூறினார்.
நிர்மலா சீதாராமனுக்கு மட்டும் தான் மகிழ்ச்சி
மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளையும், செயல்பாடு களையும் கடுமையாக விமர்சித்த பிருந்தா காரத், நாடு கடும் நெருக்கடி யில் சிக்கித் தவிக்கிறது. பணவீக்கம் அதிகரிப்பு, வேலையில்லாத் திண் டாட்டம் எளிய மக்களின் வாழ்க்கையை சின்னா பின்னமாக்கியுள்ளது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளூர் சந்தை ஒன்றிலிருந்து காய் கறிகளை வாங்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதே நேரத்தில் கடும் விலையேற்றம் காரணமாக பெரும்பாலான மக்களின் தட்டுகள் காலியாகத்தான் உள்ளது. காய்கறி கள் மட்டுமல்ல, அனைத்து அத்தியா வசியப் பொருட்களும் கடுமையாக உயர்ந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பணவீக்கம் தொடர்வதால் மக்கள் உணவுத் தேவை யை சரிபாதியாகக் குறைத்துக் கொண்டுள்ளனர். பசி, ஊட்டச்சத்து குறைபாடு, இரத்த சோகையால் மக்கள் பாதிக்கப்பட்டுள் ளனர். சமீபத்தில் வெளியான உலகப் பட்டினிக் குறியீட்டில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது என தெரிவிக்கப் பட்டுள்ளது. மக்களிடையே வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்வதன் மூலம் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சனைகளை திசை திருப்ப மோடி அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி யடையாது என்று கூறினார்.
பழங்குடி மக்களை விரட்டும் அரசு
ஜார்க்கண்டில் பழங்குடியினரின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. அவர்கள் திட்டமிட்டு வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்படுகின்றனர். மாநில அரசு. வன உரிமைச் சட்ட விதிகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும், வனநிலங்களை கையகப் படுத்தும் உரிமை கிராமசபைகளுக்கே உள்ளது. அந்த உரிமையைப் பறித்து பழங்குடியினரின் நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரிக்க ஒன்றிய அரசு வழிவகை செய்துள்ளது என்றும் பிருந்தா காரத் கூறினார். கட்சியின் மாநிலச் செயலாளர் பிர காஷ் விப்லவ் பேசுகையில், ஜார்க் கண்ட் மாநிலத்தில் நிலப்பதிவேடுகள் திருத்தப் பிரச்சனையில் அரசு முறைப்படி பதிவுகளை சரி செய்ய மறுத்தால் வெகுவிரைவில் ராஞ்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானம் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டது.
தாமரையை வீழ்த்த செங்கொடியை உயர்த்துவீர்!
கூட்டத்தில் பேசிய கட்சியின் ஒடிசா மாநிலக் குழு உறுப்பினரும், சட்ட மன்ற உறுப்பினருமான லக்ஷ்மண் முண்டா, பெரு நிறுவனங்களின் உதவி யுடன் நாட்டில் தண்ணீர், வனப்பகுதி கள், விளை நிலங்கள், கனிமங்கள் கொள்ளையடிக்கப்படுவதை எதிர்த்து நாடு முழுவதும் மக்கள் போராடி வருகிறார்கள். அந்தப் போராட்டம் தொடரும் என்றார். ஜார்க்கண்ட் மாநிலக் குழு உறுப்பினரும், தாமோர் சட்டமன்றப் பொறுப்பாளருமான சுரேஷ் முண்டா பேசுகையில், 22 ஆண்டுகளுக்குப் பிறகு தாமோரில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரி வித்ததோடு, தாமரையை வீழ்த்த உழைப்பாளிகள் செங்கொடியை உயர்த்திப் பிடித்து போராட்டங்களில் பங்கேற்கவேண்டுமென்றார். முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஜார்க்கண்ட் மாநில அதிகாரப்பூர்வ இணையதளத்தை பிருந்தா காரத் தொடங்கி வைத்தார்.