states

img

பாஜக தான் மிகப்பெரிய ஆபத்து: எம்.வி.கோவிந்தன்

திருவனந்தபுரம், மே 16- கர்நாடகாவில் பாஜகவை தோற் கடித்தது தீர்க்கமான நடவடிக்கை என்றும், பா ஜ க தான் மிகப்பெரிய ஆபத்து, அனைத்து மாநிலங்களிலும் பாஜக எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேரள மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் கூறினார். திருவனந்தபுரம் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில், குப்பை இல்லாத கேரளா பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பருவமழைக்கு முந்தைய துப்புரவு பிரச்சாரத்தை தொடங்கி வைத்து அவர் பேசினார். அப்போது அவர் மேலும் கூறுகையில், காங்கிரஸ் இப்போது சொந்த நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. எதிர்க்கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளின் ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். பா.ஜ.க.வுக்கு எதிராக ஒன்றுபட வேண்டிய அனைவரையும் அணிதிரட்ட வேண்டும். அதற்கு காங்கிரஸ் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். மேலும் அவர் கூறுகையில், மாநக ராட்சி, நகராட்சிகள் முழுவதுமாக குப்பையில்லா பகுதிகளாக மாறினால், குப்பையில்லா மாநில மாக கேரளா மாறும். திடக்கழிவு மேலாண்மை இன்று மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. திடக்கழிவு உருவாகும் இடத்தில் அதனை நிர்வகிப்பது பயனுள்ளதாக இருக்கும்.  பரவலாக்கப்பட்ட கழிவு மேலாண்மை யில் அதிக முன்னேற்றம் ஏற்பட்டுள் ளது. ஆனால் அது ஒருமுகப்படுத்தப் படும் போதுதான் பிரச்சனை வருகிறது என்றும் அவர்  கூறினார்.