தேசிய கீதத்தை அவமதித்த பீகார் முதலமைச்சர்
பீகார் மாநிலத்தில் பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது. முதலமைச்சராக ஐக்கிய ஜனதாதள மூத்த தலைவர் நிதிஷ் குமார் உள்ளார். இந்நிலையில், பாட்னாவில் வியாழ னன்று நடைபெற்ற விழா ஒன்றில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட நிதிஷ் குமார், நேராக நின்று தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தா மல் மேடையில் இருந்த தலைமைச் செய லாளரிடம் நிதிஷ் குமார் வளைந்து, நெளிந்து சிரித்து பேசினார். இதுதொடர் பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் கண்டனங்களுடன் வைரலாகி வருகிறது.