புதுதில்லி, அக்.27- நவராத்திரி, தீபாவளி பண்டிகை யையொட்டி, நாடு முழுவதும் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளதாக புள்ளிவிவ ரங்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் தீபாவளி ஒரு குறிப் பிட்ட மதம் சார்ந்த பண்டிகையாக இருந்தாலும், மற்றொரு புறத்தில் அது மிகப்பெரிய வர்த்தக விழாவாகவும் உள்ளது. ஆண்டு முழுவதும் சேமித்த பணம் மற்றும் தங்களின் உழைப்பிற் காக நிறுவனங்கள் அளிக்கும் போனஸ் ஆகியவற்றைக் கொண்டு, பெரும் பாலான மக்கள் இந்தக் காலத்தில்தான் தங்க, வெள்ளி நகைகள், வீட்டு உப யோகப் பொருட்கள், கார், பைக் உள் ளிட்ட வாகனங்கள், ஆடைகள், பண்டி கைக்கான மளிகைப் பொருட்கள், இனிப்புகள், பட்டாசுகள் போன்றவை வாங்கும் நடைமுறையைக் கொண்டி ருக்கின்றனர். வங்கிகள், வர்த்தக நிறு வனங்களும் இதையொட்டி வியாபா ரத்தைப் பெருக்கும் வகையில் தள்ளு படி உள்ளிட்ட சலுகைகளை அறி விப்பர். இதனால், தீபாவளிக் காலத்திலும், அதற்கு முந்தைய நவராத்திரி காலத்தி லும் பணப்புழக்கம் அதிகமாக இருக் கும். வர்த்தகமும் அதிகமாக நடை பெறும். அந்த வகையில், இந்தாண்டு பண்டி கைக் காலத்தில் (நவராத்திரி முதல் தீபா வளி வரை) 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சில்லரை வர்த்தகம் நடை பெற்றுள்ளதாக அனைத்திந்திய வர்த்த கர்கள் கூட்டமைப்பின் (CAIT) தலைவர் பி.சி. பார்தியா தெரிவித்துள்ளார்.
தலைநகர் தில்லியில் மட்டுமே 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சில்லரை வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பண்டிகைக் காலம் முடிவடைய இன்னும் சில தினங்கள் இருக்கும் சூழலில் இந்தாண்டு பண் டிகை சீசனில் சில்லறை வர்த்தகம் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக வும் அவர் தெரிவித்துள்ளார். தீபாவளிக்கு முந்தைய நாள் தந்தேரஸ் பண்டிகை கொண்டாடப் படும். தந்தேரஸ் அன்று மக்கள் தங்கம், வெள்ளி மற்றும் பாத்திரங்களை வாங்கு வது வழக்கம். இந்தாண்டு தந்தேரஸ் பண்டிகைக்கு வியாபாரம் சுமார் 20 சத விகிதம் வரை அதிகம் நடைபெற்றதாக வைரம் மற்றும் நகை தொழிற்துறை சங்கம் கூறியுள்ளது.