states

img

கேரள சில்வர் லைன் ரயிலுக்கு சாதகமான நிலைப்பாடு பிரதமரை சந்தித்த பின் முதல்வர் பினராயி விஜயன் நம்பிக்கை

புதுதில்லி, மார்ச் 25- கேரள அரசின் கே-ரயில் நிறு வனமும், ஒன்றிய ரயில்வேயும் இணைந்து சில்வர்  லைன் திட்டத்தை நிறைவேற்ற சாதகமான பதிலை பிரதமர் அளித்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். புதுதில்லியில் வியாழனன்று (மார்ச் 24) பிரதமர் நரேந்திர மோடி யை சந்தித்த பிறகு கேரள முதல்வர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தலைமைச் செயலாளருடன் பிரதமரை சந்தித்தோம். நாங்கள் கூறியவற்றை பிரதமர் கவனமாக கேட்டார். நல்ல விவாதத்துக்கு இந்த  சந்திப்பு பயன்பட்டது. ரயில்வே அமைச்சருடன் விரிவாக பேச லாம் எனவும் நம்பிக்கை தெரி வித்தார். பிரதமருடன் நடந்த சந்திப்பு கே-ரயிலுக்கு விரைவான இறுதி ஒப்புதல் கிடைக்கும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சில்வர் லைன் திட்டத்துக்கு சாதக மாக பிரதமரின் அணுகுமுறை இருந்தது.

கேரளத்தின் தனித்த பிரச்சனை

பாதுகாப்புடன் போதிய வசதி களும் வேகமும் கொண்ட போக்குவரத்து வளர்ச்சி தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. கேரள சாலை களில் உள்ள வளைவுகள், நிலவி யல் ரீதியான மேடு பள்ளங்கள் அனைவரும் அறிந்தது. இவை சாலைப்போக்குவரத்தின் பாது காப்பை பாதிக்கின்றன. அண்டை  மாநிலங்களுடன் ஒப்பிடும்போது கேரளத்தில் சாலை போக்கு வரத்தில் சராசரி வேகம் 40 சத விகிதமும், ரயில் போக்குவரத்தில் 30 சதவிகிதமும் குறைவாக உள் ளது. எனவே இவற்றை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தேசிய பாதைக்காக நிலம் கைய கப்படுத்துவதில் 25 சதவிகிதம் செல வை மாநில அரசே ஏற்கும் நிலை கேரளத்தில் மட்டுமே உள் ளது. இதற்கு காரணம் மற்ற மாநி லங்களில் தேசிய நெடுஞ்சாலை பணி கள் நடந்தபோது கேரளத்தில் நடை பெறவில்லை. தற்போது நிலத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிலம் கையகப்படுத்த இவ்வளவு பெரிய தொகை கொடுக்க முடி யாது என்றும் மாநில அரசை கையகப் படுத்தி தருமாறும் கேட்டது. அதைத் தொடர்ந்து நடந்த விவா தங்களின்படி மாநில அரசு 25 சத விகித தொகை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உரிய நேரத்தில் செய்யாமல் போனதால் ஏற்பட்ட பாதிப்பு இது. தேசிய நெடுஞ்சாலை  66 க்கு தேவையான நிலத்தில் 92 சதவிகிதம் கையகப் படுத்தப்பட்டுவிட்டது. 45 மீட்டர் அகலம் கொண்ட தேசியப் பாதை விரைவில் செயல்பாட்டுக்கு வரும். தேசிய நீர்வழிப்பாதை அனை வரும் எதிர்பார்க்கும் ஒன்றாகும். இதில் கொல்லம் - கோழிக்கோடு 328 கிலோமீட்டர் நீளம், கொல்லம் முதல் கோட்டப்புறம் வரை உள்ள 168 கிலோ மீட்டர் நீளம் போக்கு வரத்துக்கு தயார் நிலையில் உள்ளது. இதற்கான பணிகள் தேசிய நீர்வழிப்பாதை ஆணையம் மூலம் நடைபெற்று வருகின்றன. இதே போல சில்வர் லைன் ரயில் திட்டம் பாதுகாப்பானது. சுற்றுச்சூழலுக்கு உகந்தது. அதனால்தான் ரயில்வே யுடன் விவாதித்து இந்த திட்டம் கூட்டாக நிறைவேற்றப்படுகிறது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் பிரதமரின் தலையீடு தேவை என்பதை இன்றைய சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.