states

img

மாட்டிறைச்சி கடத்தியதாக கும்பல் தாக்குதல் பாதிக்கப்பட்டோர் மீதே வழக்கு பதிவு

ராய்ப்பூர், நவ. 3- சத்தீஸ்கரின், பிலாஸ்பூரில் புத னன்று மாட்டிறைச்சி வைத்திருந்த தாகக் கூறி இரண்டு பேரை ஒரு கும்பல் அடித்து, உதைத்து, தெருக்களில் ஊர்வலமாக கொண்டு சென்றுள்ளது. அவர்களை இருசக்கர வாகனத்தில் இருந்து இறக்கி பெல்ட்டால் அடிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பிலாஸ்பூரில் நரசிங் தாஸ் (50), ராம் நிவாஸ் மெஹர் (52) ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டி ருந்தனர். மாட்டு இறைச்சி கடத்துவ தாக கூறி அவர்களை ஒரு கும்பல் தடுத்து நிறுத்தி பெல்ட்டால் அடித்து உடையெல்லாம் கிழிந்த நிலையில் அரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மாட்டிறைச்சி கடத்திய தாக உள்ளூர்வாசி ஒருவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். அவர் களிடம் இருந்து 33.5 கிலோ மாட்டி றைச்சி பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால், இறைச்சியின் ஆய்வு அறிக்கை வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில், கும்பல் வன்முறை யில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை யினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.