இலங்கை கடற்படையினரால் 2024ஆம் ஆண்டு 520 கைது சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த ஆண்டின் (2025) கடந்த 40 நாட்களில் 77 கைது சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்களை ஒன்றிய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
2018 யுஜிசி விதிகளுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள புதிய வரைவு விதிகள் ஒன்றிய அரசின் கைகளில் அதிகாரத்தை குவிக்க மட்டுமே வழிவகுக்கிறது. இதனை எந்த வகையிலும் ஏற்கமாட்டோம். யுஜிசி புதிய வரைவு விதிகள் அரசியல் சட்டத்துக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கும் விரோதமானவை ; ஆபத்தானது ஆகும்.
ஆம் ஆத்மியும் காங்கிரஸும் ஒன்றையொன்று அழிக்கப் போராடின. அதனால் தில்லி தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி உள்ளது. இந்த தோல்வியில் இருந்து எதிர்க்கட்சிகள் பாடம் கற்க வேண்டும். இல்லையென்றால் மோடி-அமித் ஷாவின் எதேச்சதிகார ஆட்சியை வலுப்படுத்தும் சூழல் ஏற்படும்.
இந்தியர்கள் உணவையோ, வேலையையோ விரும்பவில்லை என்பது போன்றும், அவர்கள் வேறு எதையோ விரும்புகிறார்கள் என்ற பிம்பம் ஒன்று உருவாக்கப்படுகிறது. இந்தியர்கள் உணவு, வேலையை விரும்பவில்லை என்றால் பிறகு என்ன தான் விரும்புகிறார்கள்? கங்கையில் குளிக்க மட்டும் தான் விரும்புகிறார்களா?