states

img

6 வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவு

புதுதில்லி, நவ.5- நாடாளுமன்றம் மற்றும்  சட்டமன்றங்களில் பெண் களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை  செய்யும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக ஒன்றிய அரசு ஆறு வாரங்களுக்குள் பதி லளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.  இந்திய பெண்கள் தேசிய கூட்டமைப்பு என்ற தன்னார்வ தொண்டு நிறு வனம் தாக்கல் செய்த பொது நல வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் ஜே. கே.மகேஸ்வரி அடங்கிய அமர்வு  முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஒப்புக் கொண்ட நீதிபதிகள், இட ஒதுக்கீடு தொடர்பான மறு ஆய்வு மனுவை சம்மந்தப்பட்ட பெண்கள் அமைப்பு தாக்கல் செய்ய மூன்று வாரம் அவகாசம் அளித்தது. 

சீத்தாராம் யெச்சூரி கேள்வி

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி, 33 சதவீத இடஒதுக்கீடு மசோ தாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யாமல் எட்டு வருட காலத்தை வீணடித்த ஒன்றிய அரசு, 10 கோடிப் பேருக்கு வேலை, 100 ஸ்மார்ட்சிட்டிகள் என ஏமாற்றும் பட்டியலில்  இட  ஒதுக்கீட்டையும் சேர்த்து விட்டதா எனக் கேள்வி யெழுப்பியுள்ளார்.