புதுதில்லி,ஜன.16- நாடு முழுவதும் குடியரசு தினம் ஜனவரி 26 அன்று கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோ னா பரவல் காரணமாக 25 ஆயிரம் பேர் மட்டுமே விழா வில் பங்கேற்க அனுமதிக்கப் பட்டனர். இந்நிலையில் இந்தா ண்டும் தில்லியில் கொரோ னா பரவல் அதிகம் இருப்ப தால் குடியரசு தின விழாவில் 24 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க உள்ளனர். இது பற்றி அதிகாரிகள் கூறுகை யில், இந்தாண்டு குடியரசு தின விழாவில் 24 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப் படும். இதில் 19 ஆயிரம் பேர் ஒன்றிய அரசின் அழைப்பின் அடிப்படையில் பங்கேற்பர். பொதுமக்கள் 5 ஆயிரம் பேர் டிக்கெட் பெற்றுக் கொண்டு கலந்து கொள் வார்கள். இந்தாண்டு வெளி நாட்டு சிறப்பு விருந்தினர் கள் விழாவில் பங்கேற்க வாய்ப் பில்லை என தெரிவித்துள்ளனர்.