புதுதில்லி, பிப்.15- நாட்டின் மிகப் பெரிய பவர் டிரான்ஸ் மிஷன் நிறுவனமான ‘பவர் கிரிட் கார்ப்ப ரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்’ (Power Grid Corporation of India Limited - PGCIL) 2021-22 நிதியாண்டின் டிசம்பர் காலாண் டில் ஒருங்கிணைந்த நிகர லாபமாக ரூ. 3 ஆயிரத்து 292 கோடியே 97 லட்சத்தை ஈட்டி யுள்ளது. மின்சாரத்தை பரிமாற்றும் பணிகளை மேற்கொண்டு வரும் பொதுத்துறை நிறு வனமான ‘பவர் கிரிட் கார்ப்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட்’ தனது 2021-22 நிதி யாண்டின் மூன்றாவது (டிசம்பர்) காலாண் டுக்கான நிதி நிலை முடிவுகளை பிப்ரவரி 9 அன்று வெளியிட்டுள்ளது. அதில், பவர் கிரிட் நிறுவனம், 2021-22 நிதியாண்டின் மூன்றாவது (டிசம்பர்) காலாண் டில் ஒருங்கிணைந்த நிகர லாபமாக ரூ. 3 ஆயிரத்து 292 கோடியே 97 லட்சத்தை ஈட்டியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. நிறுவனத்தின் செயல்பாடுகள் மூல மான நிகர வருவாயும் அதிகரித்துள்ளது. நிகர வருவாய் கடந்த 2020-21 நிதியாண்டின் மூன்றாவது (டிசம்பர்) காலாண்டில் ரூ. 10 ஆயிரத்து 142 கோடியாக இருந்த நிலை யில், தற்போது 2021-22 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 3 சதவிகிதம் அதிக ரித்து ரூ. 10 ஆயிரத்து 446 கோடியே 88 லட்ச மாக உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் முக்கிய “டிரான்ஸ் மிஷன் பிசினஸ்” மூலம் கிடைத்த வரு வாய், ஆண்டுக்கு 2.3 சதவிகிதம் அதிக ரித்து, ரூ. 10 ஆயிரத்து 43 கோடியிலிருந்து, ரூ. 10 ஆயிரத்து 275 கோடியாக உயர்ந் துள்ளது. கன்சல்டன்சி வணிகத்தின் மூல மான நிறுவன வருவாய் ரூ. 173 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ. 123 கோடியாக மட்டும் இருந்தது. தற்போது அது 41 சதவிகி தம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதையடுத்து, பவர் கிரிட் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு 2021-22 நிதி யாண்டிற்கான இரண்டாவது இடைக்கால ஈவுத்தொகையாக (டிவிடெண்ட்) பங்கு ஒன் றுக்கு 5 ரூபாய் 50 காசுகளை அறிவித்துள்ளது.