‘மோடி ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் அவசர நிலையை விட மோசமானது’
இந்தியா சுதந்திரம் அடைந்து 3 மாதங் களுக்குப் பிறகு, அதாவது நவம்பர் 26, 1947 அன்று மகாத்மா காந்தி, “ஆளும் கட்சி தனது சொந்த பிரச்சாரத்திற்கும், பிம்பத்தை உருவாக்குவதற்கும் ஊடகங் களைப் பயன்படுத்துவது சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும்” என எச்சரித்தார். அன்று காந்தி கூறியதை இன்று மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு செயல்படுத்தி வரு கிறது. அவற்றை விரிவாக பார்க்கலாம் :
ஊடகங்களும், அவசரநிலையும்
1975 முதல் 1977 வரை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி விதித்த 19 மாத கால அவ சரநிலையின் போது, பிரச்சாரம், பிம்பத்தை வளர்ப்பதற்காக ஊடகங்கள் அவரது அரசாங் கத்தால் கட்டுப்படுத்தப்பட்டன. தணிக்கை இருந்தன; அரசாங்க ஆணைகளைப் பின்பற் றாததற்காக செய்தித்தாள்கள் கட்டாய நட வடிக்கையை எதிர்கொண்டன. ஆனாலும் அர சியலமைப்பில் பொறிக்கப்பட்ட அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தியே இந்த நடவ டிக்கைகளை இந்திரா காந்தி மேற்கொண்டார். அப்போது ஜனசங்கத்தின் (இப்போது பாஜக) ஒரு பகுதியாக இருந்த எல்.கே.அத்வானி, “ஊடகங்கள் வளைந்து கொடுக்கச் சொன் னால், அது ஊர்ந்து சென்றது” என்றெல்லாம் விமர்சனம் செய்தார். ஆனால் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சி யில் அவசரநிலை அதிகாரப்பூர்வமாக அறி விக்கப்படவில்லை என்றாலும், ஊடகங்களின் நிலை 1975-77இல் இருந்த அவசரநிலை காலத்தை விட மோசமாக உள்ளது. மோடி அரசு இரக்கமின்றி ஊடகங்களை பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்துகிறது. சர்வாதிகாரத்தின் வருகையை உறுதிப்படுத்த காந்தியின் அளவுகோலைப் பயன்படுத்து வதன் மூலம், மோடியின் ஆட்சி காந்தியின் அச்சங்களை ஒரு பயங்கர யதார்த்தமாக மாற்றி யுள்ளது என்பதை உறுதியாகக் கூறலாம்.
மோடியும், ஊடக நிர்வாகமும்
2002ஆம் ஆண்டு பல முஸ்லிம்களைக் கொன்ற இரத்தக்களரி கலவரங்களைக் கையாள் வதில் கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்து அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த மோடியிடம் பிபிசி செய்தி நிறுவனம் கேட்ட போது, இன்னும் எவ்வளவு உயிர்களைக் காப்பாற்றியிருக்க வேண்டும் என்று அவர் ஒரு போதும் கூறவில்லை. மாறாக, கலவரங்கள் மற்றும் அந்த வகுப்புவாத வன்முறையின் போது அவரது தலைமைத்துவம் குறித்து செய்தி வெளியிட்ட ஊடகங்களை சிறப்பாக நிர்வகித்திருக்க வேண்டும் என்று மட்டுமே கூறி திசை திருப்பும் வேலையில் மட்டுமே மோடி ஈடுபட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
முஸ்லிம் எதிர்ப்பு விஷம் மோடியின் 11
ஆண்டுகால ஆட்சியில் இந்தியா கண்டது என்னவென்றால், ஊடகங் கள், பிரதான தொலைக்காட்சி சேனல்கள், அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடகங்களின் பெரும் பகுதி இரக்கமற்ற முறையில் நிர்வகித்து, மோடியின் பிம்பத்தை உயர்த்து வதற்கும், பாஜக பிரச்சாரத்தில் ஈடுபடுவ தற்கும், வெறுப்பு நிறைந்த, கற்பனையான செய்திகளைப் பரப்புவதற்கும் கருவி களாகவே செயல்படுகின்றன. மோடி அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் இத்தகைய ஊடகங் கள் “கோடி மீடியா ஊடகங்கள் (கோயபல்ஸ் மீடியா)” என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஊடகங்கள் பாஜகவின் ஊதுகுழல்களாக உள்ளன. மோடி ஆட்சியின் தகவல்களை ஒரு பண்டமாக சந்தைப்படுத்துவதில் ஈடுபடு வதோடு, வகுப்புவாத துருவமுனைப்பை நோக்கமாகக் கொண்ட கதைகளைப் பரப்புவதற்கு முஸ்லிம் எதிர்ப்பு விஷத்தை கக்குகிறது. மத ரீதியாகப் பிரிக்க... இந்துத்துவத்தில் வேரூன்றிய மோடியின் பிராண்ட் பிம்பத்தை ஆக்ரோஷமாக ஊக்கு விப்பதன் மூலம், ஊடகங்களின் இந்த மோச மான பயன்பாடு இந்தியாவின் அரசியலமைப்பு பார்வையை அழிப்பதையும், கூட்டு கலாச்சா ரத்தில் வேரூன்றிய மதச்சார்பற்ற மற்றும் பன் மைத்துவ மரபுகளை ஆபத்தில் ஆழ்த்துவதை யும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்தகைய கையாளுதல், 1947இல் காந்தியால் ஆபத்தான முறையில் கோடிட்டு காட்டப்பட்ட, ஆழமடைந்து வரும் சர்வாதிகார போக்குகளைக் குறிக்கிறது. இதற்கு நேர்மாறாக, 19 மாத அவசரநிலையின் போது, தணிக்கை செய்யப்பட்ட ஊடகங்கள் இப்போது செய்யப்படுவது போல் சமூகத்தை மத ரீதி யாகப் பிரிக்க ஒருபோதும் பயன்படுத்தப்பட வில்லை. உண்மையில், இந்திய மக்களுக்கு மதச்சார்பின்மை மற்றும் சோசலிசத்தின் மதிப்புகள் மிகவும் முக்கியமானவை. இந்திரா காந்தி அரசியலமைப்பின் முகவுரையில் “மதச் சார்பற்ற” மற்றும் “சோசலிஸ்ட்” என்ற வார்த்தை களைச் சேர்ப்பதன் மூலம் தனது நற்சான்றி தழ்களை மெருகூட்ட முயன்றார். சமீபத்தில் உச்சநீதிமன்றம் அந்த நடவடிக்கையின் அரசி யலமைப்பு செல்லுபடியை உறுதி செய்தது. சுதந்திரச் செயல்பாடு 19 மாத அவசரநிலை காலத்தில் இந்திரா காந்தி ஆட்சியில் ஊடகங்கள் கட்டுப்படுத்தப் பட்டன. 1977 இல் அது நீக்கப்பட்ட பிறகு, அனைத்து ஊடகக் கட்டுப்பாடுகளும் நீக்கப் பட்டு, மக்களவைத் தேர்தல் தேதிகள் அறி விக்கப்பட்டன. ஊடகங்களும் எதிர்க்கட்சி களும் சுதந்திரமாகச் செயல்பட்டன, மேலும் இந்திரா காந்தியின் ஆட்சியை ஜனதா கட்சி தோற்கடித்தது. ஜன சங்க (இப்போது பாஜக) உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் பொறுப்புகளைத் தக்கவைத்துக் கொண்டதற்கு எதிரான எதிர்ப்பு காரணமாக ஜனதா கட்சி இரண்டரை ஆண்டுகளுக்குள் கவிழ்ந்தது. 1980 பொதுத் தேர்தலில் இந்திரா காந்தியின் காங்கிரஸ் ஜனதா கட்சியை தோற்கடித்தது. 11 ஆண்டுகளாக மோடி அரசு ஊடக கட்டுப்பாடு... கடந்த 11 ஆண்டுகளாக முன்னாள் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகரான மோடி, அரசு இயந்திரத்தைக் கட்டுப்படுத்தி வருகிறார். முறையான அவசரநிலை அறிவிப்பு இல்லா மல், இடைவிடாத பிரச்சாரப் பரவலை உறுதி செய்வதற்காக, ஊடகப் பிரிவுகளின் பெரும் பகுதி மோடியின் ஆட்சியால் கட்டுப்படுத்தப் படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பின் 75ஆவது ஆண்டு நிறைவு குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட சட்ட வல்லுநர் ராஜீவ் தவான், “இந்தியா ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகார மாக குறைக்கப்பட்டுள்ளது” என்பதை மிகவும் கவனமாகக் குறிப்பிட்டார். 151 ஆவது இடம் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் 180 நாடு களில் இந்தியா 151ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த குறைந்த தரவரிசை பத்திரி கையாளர்களுக்கு எதிரான கட்டாய நட வடிக்கைகளுடன் சேர்ந்துள்ளது. கடுமையான சட்டங்களைப் பயன்படுத்தி பத்திரிகை யாளர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நியூஸ் கிளிக் போன்ற செய்தி தளம் காவல்துறை மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட நிறு வனங்களின் சோதனைகளை எதிர் கொண்டுள்ளது. சமீபத்தில் கூட எந்த முன்னறிவிப்பும் இல்லா மல் மோடியின் ஆட்சி பல்வேறு யூடியூப் செய்தி சேனல்களையும், “தி வயரின்” வலைத் தளத்தையும் அணுகுவதைத் தடுத்தது. சிஎன்என் செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி, ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தி யாவின் இராணுவ விமான இழப்புகளைப் புகாரளிக்கும் செய்தியை நீக்கிய பின்னரே தி வயருக்கு அணுகல் அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டது. சர்வாதிகாரப் பிரதிபலிப்பு ஹத்ராஸில் ஒரு தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப் பட்டதை செய்தியாக்கும் பணியில் ஈடுபட்ட தற்காக உத்தரப்பிரதேசத்தில் பத்திரிகையாளர் சித்திக் கப்பன் கைது செய்யப்பட்டார். ஜம்மு-காஷ்மீரில் இணைய சேவை முடக்கம், தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட விதம், ஸ்ரீநகர் பத்திரிகையாளர் மன்றம் மூடப்பட்டது ஆகிய வை ஆட்சியின் சர்வாதிகார தூண்டுதல்களை பிரதிபலிக்கின்றன. சுயாதீன ஊடகங்களை குறி வைப்பதன் மறுபக்கம், “கோடி மீடியா” ஊடகங்களுக்கு வகுப்புவாத உள்ளடக்கத்தை பரப்புவதற்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த டிஆர்பி மதிப்பீடுகளுக்காக தொலைக்காட்சி சேனல்களில் வெறுப்பு நிறைந்த கதைகள் ஒளிபரப்பப்படுகின்றன என்று உச்சநீதிமன்றம் கூட கூறியுள்ளது. ஆனால் தடையின்றி விஷத்தை கக்கும் சேனல்களுக்கு எதிராக எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. தமிழில் சுருக்கம் : எம்.சதீஸ்குமார் ‘தி வயர்’ செய்தித் தளத்திலிருந்து...