states

img

தோல்வி பயத்தால் வன்முறை

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின ஊழியர் பாதல் ஷில் (49), பாஜக குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திரிபுராவில் பஞ்சாயத்து தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட்  கட்சியின் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், தெற்கு திரிபுரா மாவட்டம் ராஜ்நகர் பகுதி மாவட்டக் கவுன்சிலர் பதவிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக் கப்பட்ட பெலோனியா செயற் குழு உறுப்பினர் பாதல் ஷில் (49), வேட்புமனு தாக்கலுக்காக வெள்ளியன்று, கட்சி ஊழியர்கள் மற்றும் மக்கள் திரளுடன் ராஜ்நகர் மோட்டார் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள பிடிஓ அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றார். 

இந்த ஊர்வலம் ராஜ் நகர் காலனி மேல்நிலைப் பள்ளியை அடைந்தபோது, ஊர்வலத்திற்குள் புகுந்த பாஜக குண்டர்கள் சிபிஎம் வேட்பாளர் பாதல் ஷில் மற்றும் சிபிஎம் ஊழியர்கள் மீது கொடூ ரத் தாக்குதல் நடத்தினர். இந்த  தாக்குதலில் பாதல் ஷில் படு காயமடைந்த நிலையில், பெலோ னியா மருத்துவமனையில் முதலு தவி அளிக்கப்பட்டு, அகர்தலா ஜிபிபி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். 

எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பொழுதிலும் சனியன்று இரவு பாதல் ஷில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் பெலோனியா பகுதியில் மட்டு மின்றி மாநிலம் முழுவதும் பதற்ற மான சூழல் நிலவி வருகிறது. 

“பாதல் ஷில் படுகொலை மூலம் பாஜக தீவிர எதிர்வினையைத் தூண்டியுள்ளது. இதுபோன்ற கொலை குற்றங்கள் நிகழ்வதற்கு பாஜகவின் அரசியல் நிரலே காரணம்” என சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், முன்னாள் முதல்வருமான மாணிக் சர்க்கார் கடும் கண்டனம் தெரிவித்தார்.

சிபிஎம் பந்த் அறிவிப்பு ; காங்கிரஸ் ஆதரவு

பாதல் ஷில்லின் படுகொலை யை கண்டித்து திரிபுராவில் 12 மணி நேரம் மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி அழைப்பு விடுத்தார். இந்த முழு அடைப்புக்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்த நிலையில், மாநிலம் முழுவதும் ஞாயிறன்று 12 மணிநேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. சிபிஎம் - காங்கிரஸ் ஊழியர்கள் பாதல் ஷில்லின் படுகொலையை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பாஜகவின் நடவடிக்கைக்கு அஞ்ச மாட்டோம்

“பாஜகவின் தாக்குதல்களால் தான் பாதல் ஷில் உயிரிழந்தார். பாஜக என்ன செய்தாலும் நாங்கள் தேர்தல் களத்தை விட்டு வெளி யேற மாட்டோம், தொடர்ந்து போரா டுவோம்; எல்லா இடங்களிலும் பாஜக துஷ்பிரயோகம் செய்ப வர்களுக்கு காவல்துறையின் ஆதரவு உள்ளது” என சிபிஎம் பெலோனியா நகர செயளாலர் தபஸ் தத்தா செய்தியாளர் சந்திப்பில் குற்றம் சாட்டினார்.