கீவ்,மார்ச் 13- உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை தற்காலிகமாக போலாந்துக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நட வடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிலை யில், உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் செயல்பட்டு வந்த இந்திய தூதரகம் தற்காலி கமாக உக்ரைனின் அண்டை நாடான போலா ந்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. போலாந்தில் உள்ள இந்திய தூதரகம் போலாந்து நாட்டின் தலை நகர் வார்சா நகரில் செயல்பட்டு வருகிறது.