states

img

நெல் கொள்முதல் நிலைய சுமைத் தொழிலாளர்கள் போனஸ் கோரிக்கை

திருவாரூர், அக்.24 - தமிழ்நாடு நேரடி நெல் கொள்முதல் நிலைய சிஐடியு சுமைப்பணித் தொழி லாளர்கள் சங்க மாநில ஒருங்கி ணைப்புக் குழுக் கூட்டம் திருவாரூ ரில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு சுமைப்பணி சம்மேளன மாநில துணைத் தலைவரும் தஞ்சாவூர் சுமைப்பணி சங்க  மாவட்டச் செயலாளருமான த.முருகேசன் தலைமை வகித்தார். சம்மேளன மாநிலத் தலைவர் ஆர்.வெங்கடபதி, பொதுச் செயலாளர் இரா.அருள்குமார், சிஐடியு  திருவாரூர் மாவட்டச் செய லாளர் டி.முருகையன், தமிழ்நாடு நேரடி நெல் கொள்முதல் நிலைய சுமைப் பணித் தொழிலாளர் சங்க த்தின் ஒருங்கிணைப்புக் குழு கன்வீ னர் கே.கஜேந்திரன், அமைப்பின் மாவட்டத் தலைவர் டி.வீரபாண்டியன் ஆகியோர் உரையாற்றினர். நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகி கள் கலந்து கொண்டனர். நாகை  சுமைப் பணி சங்க மாவட்டச் செயலா ளர் ஜெயராமன் நன்றி கூறினார். நேரடி கொள்முதல் நிலைய சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சட்டப்படியான ஆண்டு போனசை தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பாகவே வழங்கிட வேண்டும். நெல் மூட்டை சிப்பத்திற்கு ரூ.30 மற்றும் அடையாள அட்டை வழங்க வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகங்கள் முன்பு அக்.27 அன்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அக்.27 அன்று நடைபெறும் போரா ட்டத்தில், திருவாரூரில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை, சுமைப்பணி சம்மேளன மாநில பொதுச் செயலாளர் இரா.அருள் குமார் ஆகியோரும், தஞ்சையில் மாநிலத் தலைவர் ஆர்.வெங்கடபதி யும் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.