states

‘குறவன்-குறத்தி’ ஆட்டத்திற்கு தமிழ்நாடு அரசு தடை

சென்னை,மார்ச் 12- குறவன் இனத்தை இழிவு படுத்தி நடத்தப்பட்டு வந்த குறவன்-குறத்தி ஆட்டத்தை தமிழ்நாடு அரசு தடை செய்து ஆணை வெளியிட்டிருப்பதை தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் வரவேற்றுள்ளது. தமிழ் நாட்டில் பல்வேறு பகுதி களில் கோவில் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் குறவன் இனத்தை கேவலப்படுத்தும் வகை யில் ஆபாசமாக பேசி ஆடப்பட்டு வந்த குறவன்- குறத்தி ஆட்டத்தை தடை செய்ய வேண்டும்.  அதை யூ ட்யூப்  ஃபில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதிக்கும் கும்பல்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழ் நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் தொடர்ச்சியாக போராடி வந் தது. மாநில, மாவட்ட மாநாடுகளிலும் தீர்மானங்களை நிறைவேற்றியது. இதுகுறித்த செய்திகட்டுரைகள் மூலம் ‘தீக்கதிர்’ தமிழ்நாடு அரசின் கவனத் துக்கும் கொண்டு சென்றது. மேலும், பல்வேறு குறவரின அமை ப்புக்களும் நீதிமன்றத்திலும் சட்ட ரீதியாக போராடி மதுரை உயர் நீதி மன்றத்தில் இந்த நடனத்தை தடை செய்ய வழக்கு தொடுத்து குறவன் குறத்தி ஆட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பை அமல்படுத்தி குற வன் இன மக்களுக்கும் இதர சமூகத் தைச் சேர்ந்த கலைநிகழ்ச்சி ஏற்பாட்டா ளர்களுக்கும் ஒரு மோதல் ஏற்படாத வகையில் குறவன் மலைக்குறவன் கொறவன் கூட்டமைப்பு கலை மற்றும் பண்பாட்டு துறை உயர் அதிகாரி களிடம் மனுகொடுத்து வலியுறுத்தி யது.

இந்த நிலையில், மார்ச் 10 அன்று அரசின் முதன்மை செயலாளர் பி. சந்தரமோகன் வெளியிட்டிருக்கும் அரசாணையில்,“ தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள்-களஞ்சியம் என்ற புத்தகத்தில் வெளியான கலை களின் அடிப்படையில், தமிழ்நாட்டில் நிலவும் 100 நாட்டுப்புறக் கலைகளைப் பயிற்றுவிப்போரும், பயிற்சி பெற்று கலைகளை நிகழ்த்துபவர்களும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேரலாம் என ஆணை வெளியிடப் பட்டது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை குறவன்-குறத்தி ஆட்டத்தை தடை உத்தரவிட்டுள்ளது. கரக்காட் டத்தின் துணை ஆட்டமாக ஆடப்பட்டு வந்த இந்த ஆட்டம் நாளடை வில் ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளில் சேர்க்கப்பட்டு ஆபாசமாக ஆடுவதா கவும், இந்த ஆட்டம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிப்பதாகவும் இழிவுப்படுத்துவதாகவும் அமைந்து ள்ளதாக அறிய வருகிறது.  எனவே, நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தின் அங்கீகரிக்கப்பட்ட கலைப்பட்டியலில் இக்கலை இடம் பெற்றிருந்தாலும் இக்கலைப்பிரிவில் (வரிசை எண் 40) இதுவரை யாரும் பதிவு செய்யப்படவில்லை.  இந்த நிலையில், 100 கலைகள் பட்டி யலில் உள்ள குறவன்,குறத்தி ஆட்டம் என்ற இப்பிரிவை நீக்கம் செய்து ஆணை வெளியிடுமாறும், கரகாட் டம் உட்பட ஆடல்-பாடல் நிகழ்ச்சி கள் மற்றும் எந்தவொரு கலை நிகழ்ச்சி களும் குறவன்-குறத்தி ஆட்டம் என்ற கலை நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதித்து ஆணை வழங்குமாறும் கலை பண்பாட்டுத்துறை இயக்கு நர் மாநில அரசை கேட்டுக்கொண்டு ள்ளார். 

அதனை கவனமுடன் பரிசீலித்தும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை செயல்படுத்தும் விதமாகவும் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரிய பட்டியலில் உள்ள ‘குறவன்,குறத்தி ஆட்டம்’ என்ற கலைப்பிரிவை நீக்கம் செய்து ஆணையிடப்படுகிறது.  மேலும், கரக்காட்டம் என்ற பெயரி லும் ஆடல்-பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் எந்தவொரு கலை நிகழ்ச்சிகளிலும் குறவன்,குறத்தி ஆட்டம் என்ற கலை நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதித் தும் அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு பி. சந்தரமோகன் தெரி வித்திருக்கிறார்.

முதலமைச்சருக்கு நன்றி

தமிழ் நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஏ.வி.சண்முகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “குறவன் இனத்தின் மாண்பை காத்தி டும் வகையில் மார்ச் 10 அன்று  குறவன் -குறத்தி ஆட்டத்தை தடை செய்து உத்த ரவு பிறப்பித்த குரலற்ற குறவரின மக்களின் குரலாக சமூக நீதி காத்த தமிழ் நாடு அரசின் முதலமைச்சருக்கு எங்கள் சங்கத்தின் சார்பிலும் லட்சக் கணக்கான குறவரின மக்களின் சார்பி லும் நன்றியை தெரிவித்து கொள்கி றோம்.  மேலும் இந்த இழிவான நடனத்தை தடை செய்ய போராடிய அனைத்து குறவன் அமைப்பு களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட் டுக்களையும் தெரிவித்துக் கொள்கி றோம்” இவ்வாறு அவர் தெரிவித்தி ருக்கிறார்.