சென்னை,ஜூன் 18- சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறி விற்பனைக்கு வருகிறது. கடந்த சில நாட்களாகவே தினசரி 400-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறி விற்பனைக்கு குவிந்து வரு கிறது. தொடர் முகூர்த்த நாட்கள் காரண மாக சந்தைக்கு வரும் வியாபாரிகள் வரத்து அதிகரித்து காய்கறி விற்பனை விறு விறுப்பாக நடந்து வந்தது. இந்த நிலையில் அதிகாலையில் சந்தைக்கு வரும் சில்லரை வியாபாரி கள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வரத்து கடந்த 2 நாட்களாக திடீரென குறைந்துவிட்டது. இதன் காரணமாக காய்கறி விற்பனை மந்தமாகி சந்தை வளாகம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. நள்ளிரவில் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.20-க்கு விற்கப்பட்ட கத்தரிக்காய் வியாபாரி கள் வரத்து குறைந்ததால் அதிகாலை யில் 60 கிலோ மூட்டை ரூ.300-க்கு விற்கப் பட்டது. ஆனால் அதையும் வாங்கி செல்ல யாரும் ஆர்வம் காட்டவில்லை. கேரட், சுரக்காய், புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனையாகாமல் மூட்டை மூட்டையாக தேக்கமடைந்தது மொத்த வியாபாரிகளை பெரிதும் கவலை அடைய செய்தது.