மத்திய காலத்தில் ஐரோப்பாவில் யூதர்களையும், முஸ்லிம்களையும் கண்டறிவதற்காக பன்றி இறைச்சி சூப்பை கொடுத்து குடிக்கச் சொல்லி சோதனை செய்வார்கள். சூப்பை குடிக்காதவர்கள் ஒன்று யூதராகவோ அல்லது முஸ்லிமாகவோ தான் இருப்பார் என முடிவு செய்யப்படுமாம். அதைப் போலவே நீங்கள் இங்கே மாட்டிறைச்சியை வைத்து தேசபக்தர்கள் யார் என்பதை சோதித்துக்கொண்டுள்ளீர்கள்.
உலகிலேயே மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ள இந்தியாவில் அந்த தொழிலில் மட்டும் சுமார் ஐம்பது லட்சம் பேர் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களிடத்தும் இத்தகைய ‘பரிசோதனை’ மேற்கொள்ளப்படுமா?