கோவைக்கு ரயில் மூலம் 1,458 டன் யூரியா வருகை
கோவை, நவ.19- சென்னையிலிருந்து ரயில் மூலம் 1,458 டன் யூரியா கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநர் முத்து லட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது, கோவை மாவட்டத்தில் ராபி பருவத்தில் மக்காச் சோளம், பயறு வகை பயிர்கள், காய்கறிகள் உட்பட பல்வேறு பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பருவத்திற்கு தேவையான அனைத்து வகையான உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அதன்படி யூரியா - 1,272 டன், டிஏபி - 952 டன், பொட்டாஷ் - 1,742 டன், காம்ப்ளக்ஸ் - 3771 டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் - 919 டன் என மொத்தம் 8,656 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை மணலியிலிருந்து எம்எப்எல் நிறுவனம் மூலம் 1,458 டன் யூரியா கோவைக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உரங்களும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தனியார் விற்பனை நிலையங்களில் தயார் நிலையில் வைக்கப்பட் டுள்ளன. விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும் உரம் குறித்து எம்எப்எம்எஸ் இணையதளம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் ஆதார் அட்டையை பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான அளவு உரங்களை வாங்கி பயன் படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைக்கடையில் தங்கம், வெள்ளி கொள்ளை
கோவை, நவ.19- கோவை அருகே உள்ள காரமடையிலுள்ள நகைக்கடை பூட்டை உடைத்து அரை கிலோ தங்கம் மற்றும் 6 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே கார மடை மாரியாபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவர் நரசிம்ம நாயக்கன்பாளையத்தில் உள்ள வைர நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தாமணி (43). இவர் காரமடை பகுதியில் நகைக் கடை வைத்துள்ளார். இவர் வெள்ளியன்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இந்நிலையில், சனியன்று காலையில் ஷட்டர்கள் உடைக் கப்பட்டிருப்பது குறித்து அக்கம் பக்கத்தினர் சாந்தாமணிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உடனே சாந்தா மணி மற்றும் செந்தில் ஆகியோர் கடைக்கு வந்து பார்த்தனர். அப்போது, கடையிலிருந்து அரை கிலோ தங்க நகைகள், 6 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. காவல் ஆய்வாளர் குமார் தலைமையில் போலீ சார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில், காவல் நிலையம் அருகிலும், கண்காணிப்பு காமிராக்கள் அதிகம் இருக்கும் பகுதியில் அரை கிலோ தங்க நகைகள்- வெள்ளி கொள்ளை நடந்த சம்பவத்தால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேளாண்மை மாணவிகள் கள ஆய்வு
கோபி, நவ. 19 – விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பங்களை பயன் படுத்துவது குறித்த ஆய்விற்காக வேளாண்மை பல்கலை மாணவிகள் கோபில் உள்ள ஒரு கிராமத்தில் தங்கி விவசா யத்தில் ஈடுபட்டு வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்தி கிராம பல்கலைக் கழக பேராசிரியர் ரெங்கநாதன் வழிகாட்டுதலின்படி, வேளாண்மை மற்றும் கால்நடை துறை தலைவர் கண்ணன் ஒப்புதலின் பேரில், இளங்கலை வேளாண்மை பட்டப்படிப்பு இறுதியாண்டு பயிலும் மாணவிகள் மு.கவியரசி மற்றும் ம.நதியா ஆகியோர் ஒருமாதம் கோபியில் உள்ள அரக்கன் கோட்டை கிராமத்தில் தங்கி விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆராய்ச்சியின் ஒருபகுதியாக பல் வேறு விவசாயிகளை சந்தித்து புதிய தொழில் நுட்பங் களை பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்கும் முறைகள் குறித்து கலந்துரையாடினர். மேலும், கால்நடை மருத்துவ மனை, பால்கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகள் மற்றும் கருவிகளை பயன்படுத்தி கற்றுணர்ந்தனர். முன்னதாக, பவானி சாகர் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வு பணிகளை கேட்டறிந்தனர். பல் வேறு வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளின் செயல் பாடுகள் பற்றியும் கேட்டறிந்தனர். வேளாண் பல்கலை கழக மாணவிகள் ஒரு மாதம் தங்கி நேரிடையாக விவசாய பணிகளை மேற்கொண்டும், விவசாய உற்பத்தியை அதிகரிக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்தும், நேரிடையாக விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஏரி பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சேலம், நவ.19- எடப்பாடி அருகே ஏரி பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட் சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், நீர்நிலை பகுதி யிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வரு கின்றது. அதன்ஒருபகுதியாக, எடப்பாடியை அடுத்த வெள்ளநாயக்கன்பாளையம் அருகிலுள்ள, அச்சம்பட்டி ஏரி பகுதியில் நீர்நிலைப் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப் பட்டிருந்த 4 வீடுகளை நகராட்சி அலுவ லர்கள் இடித்து அகற்றினர். முன்னதாக, கடந்த மே 25 ஆம் தேதி யன்று சம்பந்தப்பட்ட குடியிருப்பின் உரிமை யாளர்களுக்கு முன்னறிவிப்பு கடிதம் வழங் கப்பட்டது. ஆனால், குடியிருப்பு வாசிகள் அங்கிருந்து காலி செய்ய மறுத்த நிலையில், நகராட்சி அலுவலர்கள் அங்கிருந்த 4 வீடு களையும் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற் றினர்.
ஈரோட்டில் குரூப் -1 தேர்வு
ஈரோடு, நவ.19- தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் -1 தேர்வு சனியன்று ஈரோடு மாவட்டத்தில் இத்தேர் விற்கு 10 ஆயிரத்து 115 பேர் எழுத விண்ணப்பித் திருந்தனர். தேர்வு மையங் களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
பல்லடம் அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு, முற்றுகை
பல்லடம் அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு, முற்றுகை திருப்பூர், நவ. 19 - திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட 2 ஆவது வார்டு சேடபாளையம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை சனிக்கிழமை திறக்கப்பட உள்ளதாக அறிந்து அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடு பட்டனர். டாஸ்மாக் கடை அமைய இருக்கும் இடத்திற்கு முன் மக்கள் திரண்டனர். அப்போது டாஸ்மாக் கடை அமைக்க கூடாது. ஏற்கனவே 2 வருடங்களுக்கு முன்பு இதே இடத்தில் கடை அமைக்க முயன்ற போது எதிர்ப்பு தெரிவித்ததால் டாஸ் மாக் கடை திறக்காமல் நிறுத்தப்பட்டது. தற்போது அரசியல் கட்சியினரின் செல்வாக்கை பயன் டுத்தி, மீண்டும் அதே இடத்தில் டாஸ்மாக் கடையை திறக்க முயற்சிகள் நடைபெறுவதாகவும், எனவே இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கும் முடிவை டாஸ்மாக் நிர்வாகம் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் பொது மக்களை ஒன்று திரட்டி, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர். இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவி டப்பட்டது.
ஊத்துக்குளியில் செல்போன் கோபுரம் அமைப்பதை தடுத்து நிறுத்த கோரிக்கை
திருப்பூர், நவ. 19 - திருப்பூர் மாவட்டம், ஊத்துக் குளி பேரூராட்சி மேற்கு வீதியில் குடி யிருப்பு பகுதியில் செல்போன் கோபு ரம் அமைப்பதை தடுத்து நிறுத்து மாறு தமிழக முதல்வருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அனுப்பி உள் ளனர். இது தொடர்பாக இப்பகுதியில் வசிக்கும் என்.மாணிக்கராஜ், எஸ். சிவக்குமார் உள்ளிட்டோர் சனிக்கி ழமை தமிழக முதல்வருக்கு அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதா வது: ஊத்துக்குளி பேரூராட்சி ஊத் துக்குளி டவுன் மேற்கு வீதி, குமரன் நகர், காவலர் குடியிருப்பு பகுதியில் சுமார் 1500 பேர் வசித்து வருகின்றனர். காவல் நிலையம், இ.எஸ்.ஐ. மருத்து வமனை, அரசு மேல்நிலைப்பள்ளி, பத்திரப் பதிவு அலுவலகம், அரசு நூலகம் என முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. இந்த குடியிருப்புகளுக்கு அரு கில், அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச் சுவரையொட்டி ஏ.டி.தங்கராஜ் என் பவர் (ஊத்துக்குளி கிராம புல எண். 191) அவரது விவசாய நிலத்தில் செல் போன் கோபுரம் அமைக்க திட்டமிட்டு நிலத்தை தோண்டும் பணியில் ஈடு பட்டு வருகிறார். இங்கே செல்போன் கோபுரம் அமைந்தால் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் கடுமை யான பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே இந்த பகுதியை சுற்றி மூன்று செல் போன் கோபுரங்கள் உள்ளன. அவற் றின் பாதிப்பே கடுமையானதாக உள் ளது. இந்நிலையில் மேலும் ஒரு செல் போன் கோபுரம் அமைக்கப்படுவது நாங்கள் இப்பகுதியில் வசிக்க முடி யாத நிலை ஏற்படும். இந்த செல் போன் கோபுரங்களில் பயன்படுத் தப்படும் ஒளிக்கற்றைகள் மிக அதிக மான கதிர்வீச்சு ஆற்றலை வெளிப்ப டுத்தும் வகையிலானது, இப்படிப் பட்ட செல்போன் கோபுரங்களால் ஏற் கனவே பறவை இனங்கள் அழிந்து வரும் சூழ்நிலையும், மனித உடலுக் கும், இந்த உயர் கதிர்வீச்சால் புற்று நோய் மற்றும் சரும நோய்கள் போன்ற அபாயகரமான ஆபத்துக ளும் ஏற்பட்டு உள்ளதாக அறிகி றோம். மேலும் புதியதாக ஒரு செல் போன் கோபுரம் அமைக்க வேலை தொடங்கியுள்ளது. சுற்றுச்சூழல் பாது காப்பு சட்டம் 1986இன் சட்ட விதிகளை மீறியதாகவும் உள்ளது. எனவே இப்ப குதியில் அமைய உள்ள செல் போன் கோபுர பணிகளை ஆரம்பத்தி லலேயே தடுத்து நிறுத்தி, இங்கு வசிக் கும் குடும்பங்களின் நல்வாழ்வை யும், குழந்தைகள் எதிர் காலத்தையும், சிட்டுக்குருவி போன்ற சிறிய பறவை இனங்களை யும் காப்பாற்ற வேண்டும் என இப்ப குதி மக்கள் சார்பில் கேட்டுக் கொண் டுள்ளனர்.
குரூப் 1 தேர்வு 2617 பேர் வரவில்லை
திருப்பூர், நவ. 19 - தமிழ்நாடு அரசு பணியா ளர்கள் தேர்வு ஆணையம் சார்பில் 92 காலி பணியிடங் களுக்கு குரூப்-1 தேர்வு டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் சார் பில் சனிக்கிழமை அறிவிக் கப்பட்டிருந்தது. இதற்காக திருப்பூரில் 5856 பேர் விண் ணப்பித்திருந்தனர். திருப்பூர் அரசு பள்ளி, கல்லூரிகள் உட்பட 20 மையங்கள் ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் விண்ணப்பித் திருந்த 5856 பேரில் 2617 பேர் தேர்வு எழுத வரவில்லை என மாவட்ட நிர்வாகத்தினர் தெரி வித்தனர்.
சிறப்பு மருத்துவ முகாம்
திருப்பூர், நவ.19- திருப்பூர் மாவட்டம், சிவன்மலை ஊராட்சி ஒன்றி யதில் சிறப்பு மருத்துவ முகாமை செய்தித்துறை அமைச்சர் துவக்கி வைத் தார். திருப்பூர் மாவட்டம் காங் கேயம்; ஊராட்சி ஒன்றியம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார் பில் சிவன்மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவமுகாமை செய்தித்துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தாராபு ரம் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன், துணை இயக் குநர் (சுகாதாரப்பணிகள்) ஜெகதீஸ்குமார், காங்கே யம் ஊராட்சி ஒன்றியக்கு ழுத்தலைவர் மகேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
காவல் நிலைய செயல்பாடு: மாணவிகள் நேரில் பார்வை
திருப்பூர், நவ. 19 - உலக பெண்கள் குற்றத் தடுப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பள்ளி மாணவிக ளுக்கு காவல் நிலையம் செயல்படும் முறை குறித்து விளக்கப் பட்டது. திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் உலக பெண்கள் குற்றத் தடுப்பு தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யும் முறை, விசாரணை நடைமுறைகள் குறித்தும் பெண்கள் பாதுகாப்புக்கு உள்ள சட்ட வழிமுறைகள், போக்சோ சட்ட விழிப்புணர்வு ஆகி யவை பற்றி பள்ளி மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு சட்ட விதிமுறை கள் குறித்து காவல் ஆய்வாளர் பிச்சையா விளக்கி கூறினார். பின்னர் இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரி யான பதிலளித்த மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப் பட்டது.
15 இடங்களில் இன்று சிபிஎம் சிறப்பு பேரவை கூட்டங்கள்
திருப்பூர், நவ. 19 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பூரில் 15 இடங்களில் ஞாயிறன்று தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு மற்றும் செந்தொண்டர் பேரணி தயாரிப்பு சிறப்புப் பேரவைக் கூட்டங் கள் நடத்தப்படுகின்றன. திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகர், திருமுருகன்பூண்டி, அவிநாசி, கருணைபாளையம், பல்லடம் நகரம், வேலம் பாளையம் தண்ணீர்பந்தல்,பிச்சம்பாளையம் புதூர், அண் ணாநகர், பெருமாநல்லூர், ஜெய்நகர், ஏ.பி.நகர், இடுவாய், குமரானந்தபுரம், பத்மாவதிபுரம், ரங்கநாதபுரம் ஆகிய பகுதி களில் இப்பேரவைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் என். பாண்டி, கே.காமராஜ், எம்.கண்ணன், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.உண்ணிகிருஷ்ணன், சி.மூர்த்தி, கே.ரங்கராஜ், ச.நந்தகோ பால், மாநககரச் செயலாளர் பி.ஆர்.கணேசன், ஆர்.காளியப் பன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இத்துடன் அங்கேரிபாளையம், வாவிபாளையம் மற்றும் வேலம்பாளையம், பல்லடம் அய்யம்பாளையம் பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெறும் பேரவைகளில் மாநில செயற் குழு உறுப்பினர் என்.குணசேகரன், ஈரோடு மாவட்டச் செயலா ளர் ஆர்.ரகுராமன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
வலிப்பால் பாதிக்கப்பட்ட நடத்துநர்
சேலம், நவ.19- சேலத்தில் பேருந்து நடத்துநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், சக ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்த்தனர். சேலம் பழைய பேருந்து நிலையத்தில், சேலத்தி லிருந்து ஓலப்பாளையம், குமாரபாளையம் வழியாக திருச்செங்கோடு செல்லும் அரசு நகரப் பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்தது. பேருந்தில் நடத்துநராக சுரேஷ்குமார் என்பவர் இருந்தார்.அப்போது திடீ ரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை யறிந்த சக ஒட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் சுரேஷ்குமாரை மீட்டு அரசு பேருந்து மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். போக்குவரத் துறை அதிகாரிகள் விரைந்து வந்து சுரேஷ்குமார் நலம் விசாரித்தனர் சக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் விரைந்து செயல்பட்டதால், அவர் உயி ருக்கு ஆபத்து நீங்கியதாக மருத்துவர்கள் தெரிவித்துள் ளனர்.
தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் கைது
கோவை, நவ.19- இளம்பெண்ணை தற் கொலைக்கு தூண்டியதாக காதலன் கைது செய்யப் பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், சுண்டக்காபட்டி சேர்ந்தவர் மேகலா பிரியா (26). இவர் கோவை பீளமேட்டில் லேப்- டெக்னீசியாக வேலை பார்த் தார். கோவை ரத்தினபுரி அருகே உள்ள பகுதியில் தனி வீடு எடுத்து தங்கியி ருந்தார். செவ்வாயன்று மேகலா பிரியா வேலைக்கு செல்லவில்லை. செல்போ னில் தொடர்பு கொண்ட போது போனை எடுக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் போலீ சாருக்கு தகவல் தெரிவித் தனர். அங்கு மேகலா பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மேகலா பிரியா செல்போனை கைப் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப் போது மேகலாபிரியா காதல் விவகாரத்தில் தற்கொலை செய்தது தெரியவந்தது. மேலும், விசாரணையில், தனியார்நிறுவனத்தில் பணி யாற்றும் பிரசாந்த் (25) என்ற வாலிபரும், மேகலா பிரியா காதலித்து வந்தனர். பிர சாந்த் அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். அதன்பிறகு மேகலாபிரியா தற்கொலை செய்தது தெரி யவந்தது. இதையடுத்து தற் கொலைக்கு தூண்டுதல் கீழ் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிர சாந்தை கைது செய்தனர்.
குறைந்த எடையுள்ள எரிவாயு உருளை அறிமுகம்
கோவை, நவ.19- கோவை மாநகரில் வடகோவை பகுதியில் உள்ள சிந்தா மணி நியாய விலை கடையில் 2 கிலோ மற்றும் 5கிலோ கேஸ் சிலிண்டர் விற்பனையினை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர் வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெள்ளியன்று அறிமுகம் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது, ‘இரண்டு மற்றும் ஐந்து கிலோ கேஸ் சிலிண்டர் நியாய விலை கடைகளில் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்தி யன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தோடு இணைந்து மாநில அரசு இத்திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதனால் தொழி லாளர்கள், சாலை மற்றும் நடைபாதை வியாபாரிகள், மாண வர்கள், வெளியூர்களில் தங்கி வேலைக்கு செல்பவர்கள், மீனவர்கள் ஆகியோர் அதிகமாக பயன்பெறுவர். கேஸ் சிலிண்டர் பெறுவதற்கு பல்வேறு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டு, முகவ ரிக்கான தகவல்களை மட்டும் அளித்து எளிதாக கேஸ் சிலிண் டர்களை பெற்றுக் கொள்ளலாம். இதனை ஒரு இடத்தி லிருந்து மற்றொரு இடத்திற்கும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். இதனால் சட்டவிரோதமாக கேஸ் சிலிண்டர் பயன்ப டுத்துவது வெகுவாக குறையும். இதனையடுத்து, கோவையில் உள்ள பல்வேறு நியாய விலை கடைகளில் கூட்டுறவுதுறை அரசு முதன்மை செயலா ளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.