states

12 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரமான ரப்பர் துறையை சீரழிக்கும் ஒன்றிய அரசு

கோவையில்  து.ராஜா பேட்டி கோயம்புத்தூர், பிப்.12- ஆளுநர் நியமனங்கள் அரசி யல் நியமனங்களாக உள்ளதாக வும், ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் மையங்களாக ஒன்  றிய அரசு செயல்படுத்துவதாக வும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச்செயலாளர் து.ராஜா  குற்றம் சாட்டினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவல கத்தில் அக்கட்சியின் பொதுச்  செயலாளர் டி.ராஜா செய்தியா ளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஆளுநராக நிய மிக்கப்படுகின்றனர். ஆளுநர்கள், ஒன்றிய அரசின் பிரதிநிதிகளாக இருக்கின்றனர். தற்போது ஆளு நர் என்பதற்கு பொருள் என்ன என்ற கேள்வி எழுகிறது. தமிழ் நாட்டின் ஆளுநர் சனாதன கருத்து களை தெரிவித்து வருவது அரசி யல் சட்டத்திற்கு புறம்பானது.

 மாநிலத்திற்கு மாநிலம் வேறு கட்சிகளாக இருந்தாலும், அர சியல் கட்சிகள் ஒருவருக்கொரு வர் விட்டுக்கொடுத்து புரிந்து கொண்டு பாஜகவிற்கு எதிராக நாட்டை பாதுகாக்க மதசார்பற்ற கட்சிகள் ஒன்றினைந்து தேசிய அளவில் செயல்பட வேண்டும்” என்றார். பாஜக ஆட்சியை பிடித்த வுடன், இடதுசாரிகள் வீழ்ந்து வரு கிறார்கள் என்ற கருத்தை நான்  ஏற்கவில்லை. தேர்தல் அரசி யலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அர சியல் கொள்கையில், தளங்க ளில் இடதுசாரிகளின் செல்வாக்கு  நீடிப்பதனால் தான், சமீபத்தில் பிர தமர் மோடி “கம்யூனிசம் என்பது அபாயகரமான சிந்தாந்தம்” என்று  விஷத்தைக் கொட்டினார். ஆர்எஸ்எஸ் சிந்தாந்ததற்கு நேரெ திராக இடதுசாரி சிந்தாந்தம் உள்ள தால், பாஜகவின் இறுதிக்கட்ட  இலக்கு என்பது இடதுசாரிகளா கவே இருக்கும். ஆனால், மக்  கள் மத்தியில் அரசியல் களத்தில் இடதுசாரிகள் இயக்கம் வலு வான இயக்கமாக உள்ளது” என்று  டி.ராஜா கூறினார். முன்னதாக. தமிழ்நாடு பல் சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி, டி. ராஜாவை சந்தித்து, மத நல்லி ணக்கம் தொடர்பாக உரையாடி னார்.