states

கருணை மனுக்கள் மீது உச்சநீதிமன்றமே இறுதி முடிவு

சென்னை,ஆக.31- தூக்கு தண்டனையை குறைக்ககோரும் மனுக்கள் மீது குடியரசுத் தலைவரின் முடிவே இறுதியாக இருக்க க்கூடாது என்றும் உச்ச நீதிமன்றமே இறுதி முடி வெடுக்கவேண்டும் என்றும்  பா.ம.க. நிறுவனர் மருத்து வர் இராமதாசு வலியுறுத்தி யுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கருணை மனுக்கள் மீதான குடியரசுத் தலைவரின் முடிவே இறுதியானது என்று புனிதப்படுத்துவதன் மூலம், குற்றவழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களின் வாழும் உரிமையை  ஒன்றிய அரசு பறிக்க நினைக்கிறது. பல தருணங்களில் குடிய ரசுத் தலைவர்களால் கருணை மனுக்கள் தள்ளு படி செய்யப்படும் போது  அதை எதிர்த்து  செய்ய ப்படும் மேல்முறையீடுகளை கனிவுடன் பரிசீலிக்கும் உச்ச நீதிமன்றம், தண்டிக்கப்பட்ட மனிதர்களின் தண்டனையை குறைத்தோ, ரத்து செய்தோ ஆணையிடுகின்றன. அண்மைக்காலங்களில் கூட , தூக்குமேடைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பலர்  உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் காப்பாற்றப் பட்டனர்.  இந்தியா போன்ற  ஜனநாயக நாடுகளில் இத்த கைய வாய்ப்பு மக்களி டமிருந்து பறிக்கப்படக் கூடாது. எனவே, இந்திய குற்ற வியல் நடைமுறைச் சட்டத் தில் இது தொடர்பாக செய்ய ப்படவுள்ள திருத்தத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.