இந்தியன் வங்கிக்குள் கனன்று கொண்டிருந்த ஆவேசம், வெவ் வேறு வங்கிகளின் ஊழியர் இதயங்க ளிலும் எதிரொலிக்கிற குரலாக உருப்பெற்ற நேரத்தில், 1990 ஆகஸ்ட் 15 அன்று நடைபெற்ற இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (பெபி) தமிழ் மாநில மூன்றாவது மாநாட்டு நிறைவில் பொதுச் செயலாளராக ஒரு மனதா கத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார் அ. ரெங்க ராஜன். ஆங்கிலம் தான் தொழிற்சங்க மேடை யிலும் ஆட்சி மொழியாகப் பழகியிருந்த வங்கி அரங்கில், இந்தியன் வங்கியில் முகிழ்த்த அனுபவத்தின் நீட்சியாகத் தமிழை முன்னெ டுத்தார் ரெங்கராஜன். ஆவேச முழக்கங்கள் தமிழில் வழங்கப்படலாயின. அதுகாறும் ஆங்கிலத்திலேயே உரையாற்றி வந்த பெரிய சங்கங்களின் தலைவர்களும் திரண்டி ருக்கும் ஊழியர்களின் உள்ளத்தை எந்த மொழி சென்று ஆட்கொள்கிறது என்பதை உணர்ந்து மெல்ல மெல்லத் தமிழுக்கு மொழி பெயர்ந்துக் கொண்டிருந்தனர். நடுத்தர வர்க்கம் என்ற உணர்வில் மிகுந்த கவனத் தோடு தவிர்த்துக் கொண்டிருந்த வர்க்க அர சியலை மிகுந்த அக்கறையோடு பொழியத் தொடங்கிய குரல்களில் ரெங்கராஜன் குரல் முக்கியமானதாக இருந்தது. பொருளாதாரம் என்ற சொல்லை அரசியல் பொருளாதாரம் என்று இலகுவாகக் கொண்டு சேர்க்க மிக எளிமையான கவிதை வரிகளும், தேர்ச்சி யான வாசிப்பு அனுபவமும் தன்னியல்பாக முன்னெழுந்து வந்து கலக்கும் உரைகளுக் காகப் பெரிதும் நேசிக்கப்பட்டவர் அவர்.
பொதுத் துறை, தனியார் துறை வங்கிக ளில் உள்ளோர் மட்டுமல்ல, சம்மேளனப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதும், ரெங்க ராஜன் அவர்களது செயல்பரப்பு, கூட்டுறவு எனும் மற்றொரு முக்கிய தளத்தையும், கிராம வங்கிகள் எனும் அடுத்த களத்தையும் தொட்டு இன்னும் பல்லாயிரம் ஊழியர்களது உள்ளங்களைச் சென்றடைந்தது அவரது தோழமை நேயம். அன்பின் வழியது உயிர் நிலை என்பதன் செயல்விளக்கமாக இருந் தது அவரது அணுகுமுறை. பெண் ஊழி யர்களது பிரத்தியேக கோரிக்கைகளைத் தொழிற்சங்கம் முன்னுரிமைப் படுத்திட தொழிற்சங்க மாமேதை பி.டி.ரணதிவே போன்றோர் வழிகாட்டிய விதத்தில் வங்கி பெண் ஊழியர் சிறப்பு மாநாடுகள், ஒருங்கி ணைப்புக் குழுக்கள், மகளிர் தின கொண்டாட் டங்கள் என்று சம்மேளனத்தின் இயங்கு தளம் இன்னும் ஆரோக்கியமான திசையில் விரிவடைந்தது.
‘வெள்ளை காலர்’ ஊழியர்கள் என்ற அடை யாளங்களைத் துறந்து தெருமுனைக் கூட்டங்களில் வங்கி ஊழியர் சங்க பிரதிநிதி களின் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. சென்னை மாநகரில் ஐக்கிய தொழிற்சங்க மேடை தோழர் டி.எஸ்.ரங்கராஜன் முன் முயற்சியில் உருவானபோது, வங்கி அரங் கின் பங்களிப்பு அதில் முக்கியமாக அமைந் தது.வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் உரி மைக்கான போராட்டம் முன்னெழுந்தபோது, அதை சேமநல நிதி, பணிக்கொடை இவற் றோடு மூன்றாவது சலுகையாகக் கேட்டு நடுத்தர வர்க்க ஊழியர் அமைப்புகளுக்கான கூட்டு மேடை உருவாக்குவதில் வங்கி, இன் சூரன்ஸ் அரங்கங்களில் முனைப்பு முக்கிய மானதாக இருந்தது, அதன் பிரச்சாரக் கட்டங்களில் ரெங்கராஜன் வழங்கிய ஆலோ சனைகளும், எழுத்து வடிவங்களும் காத்திர மானதாக அமைந்தன.
நடுத்தர வர்க்க ஊழியர் போராட்டங்க ளை ஊடக கவனத்தில் ஈர்த்ததில் ரெங்க ராஜன் பங்கு அபாரமானது. வங்கி ஊழியர் போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் நாளேடுகளில் முன்னிலும் முக்கியமான இடத்தை எட்டின. வறட்டுத் தனமாக இராது, போராட்டங்களின் வீச்சு என்னவாக இருந்தது என்பதை காசோலை பரிவர்த்தனைகள் உள்ளிட்டு என்ன மாதிரியான பாதிப்பு என்று புள்ளி விவரங்களோடு நிறுவும் அவரது பத்தி ரிகை அறிக்கைகள் சிறப்பு கவனம்பெற்றன. 1992 டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தேசம் முழுவதையும் உலுக்கியபோது, நடந்த அராஜகத்தைக் கண்டித்தும் மதச்சார்பின் மையை முன்னெடுத்தும் அந்நாட்களில் நடுத்தர வர்க்க ஊழியர்களிடம் செய்தி களைக் கொண்டு செல்வது நாடு முழுவ துமே சவாலாக இருந்தது. நரசிம்மராவ் ஆட்சி உச்சநீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதி தவறியதைச் செம்மையாக விமர்சித்து தி இந்து நாளேட்டில் டிசம்பர் 7 அன்று வெளி வந்த கேஷவ் அவர்களது கார்ட்டூனையும் முன் வைத்து, வங்கி ஊழியரிடையே பேசத் தக்க பக்குவ மொழியில் சுற்றறிக்கை எழுதி யது ரெங்கராஜன் அவர்களது தனித்திறன் என்று குறிப்பிட வேண்டியது. சில ஆண்டு களுக்குப் பிறகு திருச்சி மாநகரில் டிசம்பர் 6 அன்று அமைந்த சம்மேளன மாநில மாநாட்டில் மத நல்லிணக்க சிறப்புக் கருத்த ரங்கில் மற்ற சங்கங்களின் தலைவர்களை யும், குறிப்பாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் கமாலுதீன் சுரானி எனும் தலை வரைப் பேச அழைத்தது குறிப்பிட வேண்டிய களப்பணி. மத நல்லிணக்கப் பண்பாட்டுக் கலைநிகழ்ச்சிகளும் பின்னர் சம்மேளனம் சார்பில் சென்னையில் நடந்தேறியது.
இசை, இலக்கியம், நாடகம் இவற்றின் கூட்டுப் பயன்பாட்டை சம்மேளனத்தின் சார்பில் காட் ஒப்பந்தத்திற்கு எதிராக ஒரு பிரச்சாரத்தை சென்னை கலைக்குழு, பீட் சேர்ந்திசைக் குழு இவற்றின் உதவியோடு பரவலாகக் கொண்டு சேர்த்ததில் அவரது பங்களிப்பு முக்கியமானது. வராக்கடன் எனும் சொல்லாடல் பொதுவெளியில் கேள்விப்படவே செய்யாதபோதே, பெருந் தொழில் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் வங்கிக்கடன் திரும்பிச் செலுத்தாமல் விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருப்பதை அம்பலப்படுத்தி 1997 மார்ச் மாதம் வீதியில் இறங்கியது வங்கி ஊழியர் சம்மேளனம். மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான சிற்றூர்கள், நகரங்கள், மாவட்ட மையங்க ளில் கலை நிகழ்ச்சிகளோடு வங்கிக்கடன் ஏய்ப்போரை கிரிமினல் குற்றவாளிகளாக அறிவிக்க அரசை நிர்பந்தித்து நடந்த மகத் தான இயக்கம் இன்றுவரை அகில இந்திய அளவில் பாராட்டப்படும் முக்கிய முன்னெ டுப்பு, ரெங்கராஜன் பொறுப்பில் இருக்கையில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய இயக்கமாகும்.
தன்னை முன்னிறுத்திக் கொள்ளாது இயக்கத்தை முன்னெடுப்பதில் ரெங்கரா ஜன் பொறுப்புக்காலம், ஆகச் சிறந்த முன் மாதிரி ஆக விளங்கும், பரந்துபட்ட மேடைக ளிலும் தான் பேச அழைக்கப்பட்டாலும் சக நிர்வாகிகளை, இளம் தோழர்களை உரை யாற்ற வைத்துக் கேட்டு ரசித்து ஊக்குவித்து மகிழ்பவராக இருந்தார் அவர். தொழிற்சங்கத் தில் மட்டுமின்றி, மார்க்சிய இயக்கத்தில் அரங்க இடைக்கமிட்டி பொறுப்பிலும், மாவட் டக் குழுவிலும் செயல்பட்ட காலங்களில் மாணவர், மாதர், வாலிபர் இயக்கங்களில் இருப்போருக்கும் உற்சாகம் அளிப்பவராக வாய்த்தது அவரது தோழமை. அத்தகைய மகத்தான தோழர் அ.ரெங்கராஜன் ஜனவரி 19 அன்று நம்மை விட்டு பிரிந்தது பெரும் துயரம் தருகிறது.