states

வல்லுறவுக்கு உள்ளான பெண்ணை எரித்த குடும்பத்தினர்!

ராஞ்சி, ஜுன் 11 - ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடிக் மாவட்டம் பென்காபாத் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை அதே கிராமத்தை சேர்ந்த நபர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கூக்குரல் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பெண்ணின் குடும்பத்தினர் பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு உதவுவதற்கு பதில் அவர்  மீது மண்ணெண் ணெய்யை ஊற்றி கொளுத்தியுள்ளனர். கிராமத்தினர் சிலர், தீயை அணைத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.