states

கர்நாடகத்தில் அரங்கேறிய சாதி ஆணவக் கொலை!

பெங்களூரு, டிச.20- கர்நாடக மாநிலத்தில், தனது  மகளை காதலித்து திருமணம் செய்து  கொண்ட ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை, பெண்ணின் தந்தையே படுகொலை செய்த சம்ப வம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் பாலக்காட் மாவட்டம் ஜம்கண்டி தாலுகாவில் உள்ள டக்கோடா கிராமத்தைச்  சேர்ந்தவர் தம்மன்ன கவுடா பாட் டில். இவரது மகள் பாக்யஸ்ரீ. இவர்,  சில மாதங்களுக்கு முன்பு தனது தந்தையின் எதிர்ப்பை மீறி, ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த புஜபலி கர்ஜிகி  (34) என்ற நபரை வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை, பெண் ணின் தந்தையான தம்மன்ன கவுடா பாட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை. மணமகன் வீட்டார் சம்மதத்துடன் பதிவு திருமணம் நடைபெற்று பின்பு அதே கிராமத்தில் இருவரும் தனி யாக வீடு எடுத்து மகிழ்ச்சியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சனிக் கிழமை கிராமத்தில் நடந்த அனு மன் கோவில் திருவிழாவில் தனி யாக கலந்து கொண்ட புஜபலி கர்ஜிகி,  நள்ளிரவில் வீட்டிற்கு செல்ல கோவில் பின்புறம் இருந்த தனது இரண்டு சக்கர வாகனத்தை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது, ஆள் நடமாட்டம் இல்லாத அந்தப் பகுதியில் புஜபலி கர்ஜிகி வரு கைக்காக காத்திருந்த தம்மன்ன கவு டாவும், அவரது இரு கூட்டாளி களும் புஜபலி கண்ணில் மிளகாய் பொடியை தூவி தாக்குதல் நடத்தி யுள்ளனர். புஜபலி இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த போது சுற்றி இருந்த மூன்று பேர் அவரை சரமாரியாக அரி வாளால் வெட்டிச் சாய்த்துள்ளனர். இதில், புஜபலி சம்பவ இடத்தி லேயே துடிதுடித்து இறந்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் புஜபலியை, அவரது மாமனாரும், அவரின் இரண்டு கூட்டாளிகளும்  சேர்ந்து கொலை செய்ததை கண்டு பிடித்தனர். தம்மன்ன கவுடாவும்,  காவல் நிலையத்தில் சரணடைந் துள்ளார். இந்த சம்பவம், கர்நாடக மாநி லத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.