* தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பணிபுரிந்த ஒடிசாவைச் சேர்ந்த தொழி லாளி மாஜி என்பவர் வேலாயுதபுரத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் பணியாற்றி வந்தார். இவர், ஆன்லைன் ரம்மியில் ரூ.70,000-ஐ இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார். *சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்த எலக்ட்ரானிக்ஸ் கடை மேலாளரான மணிமுத்து வேப்பிலைப் பட்டியில் உள்ள கோவிலில் தற்கொலை செய்து கொண்டார். *சென்னை கீழ்ப்பாக்கம் டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாண வர், ஆன்லைன் சூதாட்டத்தில் தனது சேமிப்பு பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார்.
*சென்னையில் உள்ள தனியார் மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றிய கணிதப் பட்ட தாரியான 29 வயதான பவானி ஆன்லைன் சூதாட்டத்தால் சுமார் 20 சவரன் நகை கள் மற்றும் ரூ.3 லட்சத்தை இழந்து தற்கொலை செய்துகொண்டார்.
*திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை அருகே மலையாண்டிபட்டியைச் சேர்ந்த சந்தோஷ் (22), மணப்பாறை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் 4-ஆம் ஆண்டு படித்து வந்தார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மூழ்கிய அவர் பணமின்றி வீட்டிலிருந்த இரண்டு கிராம் மோதிரம் மற்றும் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய சந்தோஷ் அந்தப் பணத்தையும் இழந்து மணப்பாறை அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
*தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்துள்ள முத்தானூர் கிராமத்தில் வசித்து வந்தவர் பிரபு. இவர் தனியார் கிரானைட் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் ரூ.15 லட்சம் வரை ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார்.
*கோயம்புத்தூர் சிங்காநல்லூரைச் சேர்ந்த பொறியாளர் சங்கர் (29), ராம் நகரில் அமைந்துள்ள ஒரு தனியார் விடுதியில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். ஆன்லைன் சூதாட்டத்தில் தனக்கு ஏற்பட்ட நஷ்டம் கடனாளியாகிவிட்டதாக எழுதி வைத்து இவர் தற்கொலை செய்து கொண்டார்.
*இதேபோல் கிணத்துகடவுப் பகுதியைச் சேர்ந்த சல்மான் (22) என்பவர் ஆன்லைன் விளையாட்டில் ரூ.10 லட்சத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டார்.
*மதுரையைச் சேர்ந்த 21 வயதான வினோத் குமார் என்ற பொறியியல் மாணவர் தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். இதற்கும் ஆன்லைன் சூதாட்டம் தான் காரணம் என்றனர் காவல்துறையினர். *கொரோனா பொது முடக்க காலத்தில் ஆன்லைன் கேம்கள் இந்தியாவில் வலுவாக வேரூன்றின. 2020- ஆம் ஆண்டில் மட்டும் ஆன்லைன் கேம் விளை யாடுபவர்களின் எண்ணிக்கை 170 சதவீதம் அதிகரித்திருந்தது.
*இந்தியாவில் ஆன்லைன் கேமிங் வணிகம் அதிவேகமாக வளர்ந்துள்ளது. இது 2021-22 நிதியாண்டில் 28 சதவீதம் அதிகரித்துள்ளது. அகில இந்திய கேமிங் ஃபெடரேஷன் ஆன்லைன் கேமிங் வணி கத்தின் மூலம் ரூ.10,100 கோடி வருவாய் ஈட்டி யுள்ளது. இதேபோல், ஆன்லைன் கேம் வணிகத்தின் வருவாய் 2023-ம் ஆண்டுக்குள் ரூ.20,000 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசு தாக்கல் செய்த மசோதா
ஆன்லைன் சூதாட்டத்தின் பாதக மான விளைவுகள் மற்றும் அதன் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற் காக ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கே. சந்துரு தலைமை யிலான குழுவை அரசு அமைத்த பிறகு, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கும் ஆன்லைன் விளை யாட்டை ஒழுங்குபடுத்துவதற்கும் தமிழக அரசு முடிவு மசோதா ஒன்றை தாக்கல் செய்தது.
ஆளுநர் ரவியும் ஒரு காரணம்
ஆன்லைன் விளையாட்டிற்கு தடை செய்யும் மசோதாவுக்கு இன்னும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காத நிலையில் ஆன் லைன் விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்பவர்களின் பட்டியல் நீள்கிறது.