செங்கல்பட்டு, மார்ச் 31 – தாம்பரம் முதல் திண்டி வனம் வரை செல்ல 120 கிலோ மீட்டருக்கு ரூ 125 கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பாதிப்படைந் துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தில் இருந்து திண்டிவனம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பரனூர், ஆத்தூர் ஆகிய இரண்டு இடங்களில் சுங்கச் சாவடிகள் செயல்பட்டு வருகிறது. இந்த சாலையை பயன்படுத்துபவர்களுக்கு 2022 - 2023 ஆம் ஆண்டுக் கான கட்டணத்தில் மாற்றம் செய்து ஒன்றிய அரசு அறி வித்துள்ளது. அதன்படி கார், ஜீப், வேன் மற்றும் இலகுரக மோட்டார் வாகனங்களுக்கு 55 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக வசூலிக்கப்படு கிறது இலகுரக வர்த்தக வாகனம் சரக்கு வாகனம் மினி பஸ் ஆகியவற்றிற்கு 90 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும் பேருந்து மற்றும் டிரக் வாகனங்க ளுக்கு 185 ரூபாயிலிருந்து 205 ரூபாய் வரையும், மூன்று அச்சுகள் கொண்ட வர்த்தக வாகனத்திற்கு 200 ரூபாயி லிருந்து 225 ரூபாயாகவும், 4 லிருந்து 6 அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு 290 ரூபாயிலிருந்து 325 ரூபாய், 7 அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு 355 ரூபாயி லிருந்து 395 ரூபாய் என்ற விகிதத்தில் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வியாழன் நள்ளிரவு முதல் 5 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை ஒரு முறை பரனூர் சுங்க சாவடியை கடந்து செல்ல கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், இருமுறைக்கான (அப் அண்டு டவுன்) சுங்க கட்டணம் 10 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக வும், சுங்கச்சாவடி அமைந் துள்ள மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு ஒரு முறை சுங்க சாவடியை கடக்க வசூலிக்கப்பட்டு வரும் கட்டண தொகை 5 முதல் 20 ரூபாய் வரையி லும், மாதத்திற்கு 50 முறை சுங்கச்சாவடியை கடக்க வசூலிக்கப்பட்டு வந்த தொகை 215 ரூபாய் முதல் 1360 வரை உயர்த்தப்பட் டுள்ளது.