states

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தல்: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை,நவ.23- தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை ஆன்லை னில் நடத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலும் இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத் தில், மதுரையைச் சேர்ந்த மருத்து வர் சையத் தாஹிர் உசேன் தாக்கல் செய்த மனுவில், “தமிழ் நாடு மருத்துவ கவுன்சிலின் உறுப்பினர்களாக உள்ள ஒன்றரை லட்சம் உறுப்பினர்க ளில் 19 ஆயிரத்து 500 பேர் அரசு  மருத்துவர்கள். இந்த தேர்தலில் நிர்வாகிகள் பதவிக்கு போட்டி யிடுபவர்களில் பெரும்பாலான வர்கள் அரசு மருத்துவர்கள். கடந்த பல ஆண்டுகளாக அரசியல் பின்னணி மற்றும் அரசி யல் செல்வாக்கான சில அரசு  மருத்துவர்கள் மட்டுமே நிர்வாகி கள் பதவிக்கு வந்துள்ளனர்.

மருத்துவ கவுன்சில் தேர்தலில், வாக்காளர்களாக உள்ள அரசு மருத்துவர்களிடம் வாக்குச் சீட்டை பெறும் வேட்பாளர்கள், தங்கள் விருப்பம் போல் அதை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த மூன்று தேர்தல்களில் இந்த நடைமுறை காரணமாக தகுதியான வேட்பாளர்கள் வீழ்த்தப்பட்டுள்ளனர். வாக்குச் சீட்டு நடைமுறையில் முழுமை யாக அத்துமீறகள் நடந்துள் ளது. தேர்தல் நியாயமாக நடத்தப் படவில்லை. எனவே, ஜனவரி 19 ஆம் தேதி தேர்தல் நடத்துவது தொடர்பாக அக்டோபர் 19 ஆம்  தேதி வெளியிடப்பட்ட அறி விப்பை ரத்து செய்ய வேண்டும்.  ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதி பதி தலைமையில் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டும்”என மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த  மனுவுக்கு தமிழக அரசும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சி லும் இரண்டு வாரங்களில் பதி லளிக்க உத்தரவிட்டு, விசார ணையை தள்ளிவைத்தார்.