states

img

அனுமதி பெறாத ஆதி யோகி சிலை

சென்னை,ஆக.24- கோவை ஈஷா யோகா மையத்தில்  உள்ள  ஆதியோகி சிலை மற்றும் அத னைச் சுற்றியுள்ள கட்டிடங்களைக் கட்டு வதற்கு அனுமதி பெறவில்லையெனில் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை  நிறுவப்பட்டுள்ளது. சிலை அமைந்து ள்ள பகுதியில் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதை எதிர்த்து கடந்த 2017 ஆம் ஆண்டில் வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் முத்தம்மாள் உயர்நீதிமன்ற த்தில்  வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், “மலைவாழ் மக்களின் வாழ் வாதாரம் பாதிக்கும் வகையிலும், வன  விலங்குகளின் இயற்கையான வாழ்க்கை முறைக்கு இடையூறு ஏற்படு த்தும் வகையிலும் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதைச் சுற்றி பல்வேறு கட்டிடங்களும் கட்டப்பட்டுள் ளன. அந்த வனப்பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. எனவே, இந்நடவடிக்கைகளுக்கு தடை  விதிக்க வேண்டும்” என்று கோரி யிருந்தார்.

2017 இல் தமிழக நகரமைப்பு திட்ட மிடல் துறை தரப்பில் தாக்கல் செய்யப் பட்ட பதில் மனுவில்,   “ஈஷா மையத்தில் 109 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் விதி மீறி கட்டப்பட்ட ஆதியோகி சிலை உள்ளி ட்ட கட்டிட பணிகளை நிறுத்துவதற்கான உத்தரவும், மூடி சீல் வைப்பதற்கான உத்தரவும் கடந்த 2012-ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தர வை எதிர்த்து ஈஷா யோகா மையம் சார்பில் அரசிடம் மேல்முறையீடு செய்ய ப்பட்டுள்ளது. மேலும், ஆதியோகி சிலை அமைக்கப்பட்டதற்கான நோக்கம் தொடர்பான அனைத்து ஆவணங்களை யும் தாக்கல் செய்யவும் உத்தரவிடப் பட்டிருந்தது” என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்த வழக்கு மீதான விசார ணை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேச வலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு  வியாழக்கிழமையன்று நடைபெற்றது.  அப்போது தமிழக நகரமைப்பு திட்ட மிடல் துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆர்.அனிதா அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் “திட்ட அனுமதி அல்லது கட்டுமான அனுமதி வழங்கி யது தொடர்பான எந்த ஆவணங்களும் எங்கள் அலுவலகத்திலோ அல்லது இக்கரை பூலுவம்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்திலோ இல்லை. வழி பாட்டுத் தலத்துக்கான, மாவட்ட ஆட்சி யரின் தடையில்லா சான்றிதழ், சுற்றுச் சூழலுக்கான மாசு கட்டுப்பாட்டு வாரிய சான்றிதழ், மலை இடர் பாதுகாப்பு அமைப்பிடமிருந்து பெறப்படும் சான்றி தழ் என எதுவுமே ஈஷா யோகா அறக் கட்டளையால் பெறப்படவில்லை. பட்டி யலில் தரப்பட்டுள்ள நிலத்தில் அரசு புறம்போக்கு நிலமும் உள்ளது. ஈஷா ஃபவுண்டேஷனுக்கு கட்டிடம் கட்ட  அனுமதியோ, தடையில்லா சான்றோ  ஈஷா ஃபவுண்டேஷன் நிர்வாகி பெற வில்லை. அதற்கான ஆவணங்கள் எது வும் இல்லை” என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.

ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்திடுக!

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தர வில், மனுதாரரும், ஈஷா அறக்கட்டளை தரப்பும் தாக்கல் செய்துள்ள ஆவ ணங்களை கோவை நகர திட்ட இணை  இயக்குநர் ஆய்வு செய்ய வேண்டும்.  அதில் சம்பந்தப்பட்ட கட்டிடம் கட்டு வதற்கான அனுமதி தரப்படவில்லை என்று தெரியவந்தால் உடனடியாக சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தவிட்டுள்ளனர்.

உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு சிபிஎம் வரவேற்பு

சென்னை, ஆக.24 - கோவை ஈஷா மைய விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:  கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையில் ஈஷா யோகா மையம் சட்ட வரம்புகளை மீறியும், உரிய அனுமதிகள் பெறாமலும் பழங்குடி மக்களுக்கு  சொந்தமான நிலங்கள் மற்றும் வன நிலங்களை ஆக்கிரமித்தும் பல்லாயிரம்  சதுர அடி கட்டடங்களை கட்டி, தொடர்ந்து விழாக்களை நடத்தி வருகின்றது. இவ்வாறு அனுமதியின்றி சட்ட விரோதமாக வன நிலங்களிலும், பழங்குடி  மக்களுக்கு சொந்தமான நிலங்களிலும் ஈஷா யோகா மையம் செயல்படு வதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், விவசாய அமைப்புகளும் தொடர்ந்து போராடி வந்துள்ளன. 

இதனைத் தொடர்ந்து வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட பொருளாளருமான முத்தம்மாள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாணப்பத்திரத்தில் கட்டிடங்கள் கட்டுவதற்கான உரிய  அனுமதி பெறவில்லை எனவும், மாவட்ட ஆட்சியரிடமிருந்தும், மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் மற்றும் மலைகள் பிரதேச பாதுகாப்பு ஆணையத்திடமிருந்தும், தீயணைப்புத்துறையிடமிருந்தும் கட்டிடங்கள் கட்டுவதற்கு ஈஷா யோகா மையம் தடையில்லா சான்று பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கரை பூலுவம்பட்டி கிராம ஊராட்சியும் அனுமதி வழங்கவில்லை எனவும், வழிபாட்டு கட்டிடங்கள் கட்ட மாவட்ட ஆட்சியர் அனுமதியும் வழங்கவில்லை எனவும் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக, ஈஷா யோகா மையத்தின் சார்பில் எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்குள்  ஈஷா யோகா மையம் தன்னிடம் உள்ள ஆவணங்களை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டுமெனவும், தவறும்பட்சத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டுமெனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பினை தலைமை நீதிபதி சஞ்சய் வி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி  பி.டி. ஆதிகேசவலு ஆகியோர்  வழங்கியுள்ளனர். இத்தீர்ப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது. இத்தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு  தாமதமில்லாமல் ஈஷா யோகா மையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு மெனவும், மேல்முறையீட்டு நடவடிக்கைகளுக்கு ஈஷா யோகா மையம்  முயற்சிக்கும்பட்சத்தில் அதனை முறியடிக்கவும் உரிய சட்ட ஏற்பாடுகளை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.