நாடு முழுவதும் 77 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் தேசியக் கொடி வடிவத்தை உருவாக்கினர். இதில் பள்ளி செயலாளர் கண்ணன், தலைமையாசிரியர் செல்வி, பள்ளிக்குழு உறுப்பினர்கள் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.