states

img

‘இந்தியா அணி’ ஆட்சிக்கு வந்து மகளிர் ஒதுக்கீட்டை நிறைவேற்றும்

சென்னை, அக்.15- சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக மகளிரணி சார்பில் ‘மகளிர் உரிமை மாநாடு’ சனிக்கிழமை (அக்.14) நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி இதில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் ,“மாநிலம், மொழி, சாதி, மத நம்பிக்கை இவற்றிற் கெல்லாம் அப்பாற்பட்டு, எல்லோரை யும் சமத்துவமாக பார்க்கக்கூடிய தத்து வத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார் கலைஞர், தன்னுடைய வாழ்நாளின் போது அதிகம் பேசப்படாத பாலின சமத்துவத்தை அவர் சிந்தித்து அதற்காக போராடுகின்ற ஒரு போராளியாக தன்னை அடையாளப் படுத்திக் கொண்டார். நமது நாட்டில் இந்திய பெண்கள் பல்வேறு துறைகளில் மிளிர்கிறார்கள். சிலவற்றைச் சொல்ல வேண்டும் என்றால் அறிவியல், ஆராய்ச்சி, ஆற்றல், கலாச்சாரம், விளையாட்டு. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, குடும் பத்தின் மையப் பொருளாக, தலைவர்க ளாக; ஆற்றுகின்ற பணி மகத்தானது. இருந்தாலும் கூட, இந்தப் போராட் டத்தில் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். இன்னும் பல்வேறு தடை களை தாண்ட வேண்டும். ஏராளமான தடைகளைத் தாண்டி தான், சமத்து வத்தைப் பெறுவதற்கான சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

அன்னை இந்திரா காந்தியின் தலைமை பண்பு, ஆற்றல், வழிகாட்டு தல், ஏழை, எளிய மக்களுக்கு நல்வாழ்வு அளிப்பது, வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற அவரது பணியை யாரா லும் மறக்க முடியாது. வரலாற்று புகழ் மிக்க 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பெண்களுக்கு ‘பஞ்சாயத்து’ ராஜ்  சட்டத்திலும் உள்ளூர் ஆட்சி அமைப்பு களிலும் கொண்டு வந்தார் ராஜீவ் காந்தி. இந்தச் சட்டத் திருத்தமானது சமூகத்தின் அடித்தளத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. சமூகப் புரட்சிக்கு வித்திடுகிறது. தற்போது நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டு சட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்று தெளி வாக இல்லை. ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்து தான் இந்த சட்டத்தை நிறைவேற்றி தர வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்று தோன்றுகிறது. இதற்கு காரணம், கடந்த 70  ஆண்டுகளில் நாம் பெற்று தந்த உரிமைகள் மற்றும் நல்ல முயற்சி களை சீரழிக்கும் வகையில் 9 ஆண்டு கால மோடி அரசின் நடவடிக்கைகள் இருப்பது மிகப் பெரிய கொடுமை யாகும். மோடி அரசு பெண்களுக்கு புதிய சுதந்திரத்தையும், உரிமை யையும் அளிக்க தயாராக இல்லை. அனைத்து உரிமைகளையும் கடந்த 9 ஆண்டுகளாக சீரழித்து வருகின்றனர்” என்றார். அவரது ஆங்கில உரையை காங்கி ரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தமிழாக்கம் செய்தார்.