சென்னை, டிச.22- மூத்த ஐஏஎஸ் அதிகாரி யும் எழுத்தாளருமான மு. ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப் பட்டுள்ளது. எழுத்தாளர் மு.ராஜேந்தி ரன் எழுதியுள்ள ‘காலா பாணி’ நாவல் 2022 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அர சின் சாகித்ய அகாடமி விரு துக்கு தேர்வாகியுள்ளது. மதுரை மாவட்டம் வட கரை கிராமத்தில் பிறந்தவர் மு.ராஜேந்திரன். அண்ணா மலைப் பல்கலைக்கழ கத்தில் சட்ட மேற்படிப்பும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் திருக்குறளில் சட்டக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். இந்திய ஆட்சிப்பணியில் பொறுப் பேற்று தமிழகத்தின் பலவித மான துறைகளில் பணி யாற்றினார். திருவண்ணா மலை மாவட்ட ஆட்சியராக பதவி வகித்தபோது அப்பகு தியில் இயற்கை வளம் சார்ந்த மலைப் பகுதிகளை கனிம வளக் கொள்ளையர் களிடம் பறிபோவதைத் தடுத்துநிறுத்தினார்.
வரலாற் றின் மீது தணியாத ஆர்வம் கொண்டு நேரில் களப்பணி களில் ஈடுபட்டார். தமிழக வர லாற்றுகால செப்பேடுகளை ஆய்வு செய்தல், ஆனந்தரங் கம் பிள்ளை நாட்குறிப்பு களின் பிரதிகளை தேடியெ டுத்து தொகுத்தல் போன்ற பணிகளில் தன்னை ஈடு படுத்திக்கொண்டார். 1801, வடகரை ஒரு வம்சத் தின் வரலாறு, ‘காலாபாணி’ போன்ற நாவல்களை எழுதி யுள்ளார். இவரது படைப்பு களுக்கு தமிழகத்தில் பல் வேறு அறக்கட்டளைகள் விருதுகள் வழங்கி கவுர வித்துள்ளன. சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள ‘காலா பாணி’ நாவல், இந் திய சுதந்திரப் போராட் டத்தை மையப்படுத்தி எழு தப்பட்டுள்ளது. இந்திய சுதந் திர போராட்ட வரலாறு சிப் பாய் கலகத்துடன் தொடங்க வில்லை. அதற்கு முன்னரே தமிழகத்தில் தொடங்கப் பட்டுவிட்டது என்பது காலா பாணி நாவலில் கூறப்படுகிறது. மு.ராஜேந்திரன் அரசுப் பணிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் தமிழக அரசு, தமிழ்நாடு கூட்டுறவு சங் கங்களின் தேர்தல் ஆணை யர் பொறுப்பை வழங்கியது.