சென்னை,பிப்.13- சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டில் தீண்டாமைக் கொடுமை இருப்பதாக ஆளுநர் ரவி பேசியிருப்பது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கை யில், “அரசியல் கருத்துகளை பிரதமர் மோடி கூறட்டும், ஜே.பி.நட்டா கூறட்டும், அண்ணாமலை கூறட்டும். அதற்கு பதிலளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், ஓர் ஆளுநர் எப்படி கூறலாம். ஆளுநர் தங்களது மரபுகளைத் தாண்டி கருத்துகளை கூறுகிறார். எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்கிறார். அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்” இந்தியாவில் தீண்டாமை இருக்கி றது. தீண்டாமை என்பது எல்லா கிராமங்களிலும் இருக்கிறது. இதற்காக ஏராளமான போராட்டங்களையும், வன்முறைகளையும் சந்தித்திருக்கி றோம் என்றும் அவர் கூறினார். தீண்டாமைக்கு அடிப்படை காரணமே ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தான் தீண்டாமையை கட்டி வளர்ப் பவர்களும், நியாயப்படுத்துபவர்க ளும் அவர்கள்தான் என்றும் குற்றம் சாட்டினார்.