states

நியாயத்தின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்குக!

சென்னை, மே 12- சாலைப் பணியாளர்களுக்கு  நியாயத்தின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சாலைப் பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மா. பாலசுப்பிரமணியன், மாநில பொ துச் செயலாளர் ஆ.அம்சராஜ் ஆகி யோர் விடுத்திருக்கும் அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- நெடுஞ்சாலைத்துறையில் நெடுஞ்சாலைகளை பராமரிக்கக் கூடிய பணியை செய்யக்கூடிய சாலை பணியாளர்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பு வழங்கும் நடைமுறை என்பது தொடர்ச்சியாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்  அடிப்படையில் சாலை பணியா ளர்களிலிருந்து இரண்டாம் நிலை  சாலை ஆய்வாளர், முதல் நிலை சாலை ஆய்வாளர்கள் கல்வித் தகு திகளின் அடிப்படையில் இளநிலை வரை தொழில் அலுவலர், இள நிலை பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர், போன்ற அடுத்தடுத்த பதிவு உயர்வு வாய்ப்புகளில் சாலைப் பணியாளர்கள் பதவி உயர்வு பெற்று வருகின்றனர். சாலைப் பணியாளர்களிலிருந்து அலுவலக உதவியாளர், இரவு காவலர் போன்ற பணிகளுக்கு பணி மாற்றத்தின் மூலமாக மாற்றம் செய்து அந்நிலையிலிருந்து பதிவுறு எழுத்தர், இளநிலை உதவியாளர் போன்ற பதவி உயர்வு வாய்ப்புகளும் சாலைப்  பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சாலைப் பணியாளர்க ளில் தகுதி வாய்ந்தவர்களுக்கு வாகன ஓட்டுநர், பதவி உயர்வு வாய்ப்புகளும் வழங்கப்பட்டு வருகிறது.

நெடுஞ்சாலை துறையில் இருக்கக்கூடிய ஜீப், கார், ரோடு ரோலர், கனரக லாரி போன்ற அனைத்து வாகனங்களையும் இயக்குவதற்கான முறையில் பதவி உயர்வு வாய்ப்புகள் வழங் கப்பட்டு சாலை பணியாளர்கள் அப்பதவி உயர்வுகளை பெற்று பணியாற்றி வருகின்றனர். இந்நிலைமையில் நெடுஞ் சாலைத்துறையில் பதவி உயர்வு வாய்ப்பு என்பது சாலை பணியா ளர்களுக்கு வழங்குவதற்கு விதிகளில் இடமில்லை என்றும் இவர்கள் சாலைப் பராமரிப்பு பணி  மட்டுமே செய்வதற்கு தான் நிய மனம் செய்யப்பட்டார்கள் என்றும்  துறையின் அமைச்சர் கருத்து தெரிவித்திருப்பது ஏற்புடைய தல்ல. நெடுஞ்சாலைத் துறையில் சாலைப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பு வழங்குவதற்கு முதுநிலை பட்டியல், தமிழ்நாடு சார்நிலை பணியமைப்பு விதிகள் என்ற அடிப்படையில் முறைப் படுத்தப்பட வேண்டும். மாறாக விதி முறைகளை பின்பற்றாமல் அதி காரிகளின் நோக்கத்திற்கு தகுந்த வாறு முதுநிலை பட்டியலை பணி வரன்முறை செய்யப்பட்ட தேதியை வைத்து நடைமுறைப் படுத்தி வருகின்றனர். இது அரசு விதிக்கு புறம்பானது.இதுகுறித்து அரசு செயலாளர், உயர் அலுவ லர்கள், அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஆனால், உரிய கவனம் செலுத்தவில்லை. இந்நிலையில், சாலைப் பணி யாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நியாயமான முறையில் பணி வழங்குவதற்கு, தமிழ்நாடு முழுவதும் தவறான முறையில் வெளியிடப்பட்டுள்ள முதுநிலை பட்டியலை முறைப்படுத்துவதற்கு அரசு ஆணை வழங்க வேண்டும். நியாயத்தின் அடிப்படை யில் தொடர்ச்சியாக சாலைப் பணியாளர்களுக்கான  பதவி உயர்வு வாய்ப்புகள் அரசு விதிகள்  மற்றும் அரசாணைகளை பின்பற்றி வழங்குவதற்கு உரிய வழிகாட்டு தலையும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி யுள்ளனர்.