தென் தமிழகத்து கிராமங்களில் “யோக்கியன் வாரான், சொம்பைத் தூக்கி உள்ளே வை” என்று வட்டார மொழியில் பேசப்படுகிற சொலவடை தான் நினைவுக்கு வருகிறது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் மீது அவதூறு பொழிவதைத் தங்கள் அன்றாடக் கடமையாக ஆர்எஸ்எஸ்/பிஜேபி சார்பு அமைப்பினர் மேற்கொண்டு வரு கின்றனர். தமிழக பிஜேபி தலைவர் தோசை இட்லி புகழ் அண்ணாமலைஜி, ‘‘தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சியைப் பிடித்தவுடன் (?) அற நிலையத்துறையை ஒழிப்பது தான் அரசின் முதல் கையெழுத்தாக இருக்கும்’’ என்று தங்க ளுக்கே உரித்தான பாணியில் சில மாதங்க ளுக்கு முன் மதவெறி உரை நிகழ்த்தினார். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அடுத்தபடி யாக, தான் செல்லுமிடமெல்லாம் ஆர்எஸ்எஸ் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிற புதிய மதுரை ஆதினம், ‘‘நான், ‘அரசே, ஆல யத்தைவிட்டு வெளியேறு’ என்னும் முழக் கத்துடன் கன்னியாகுமரியிலிருந்து மதுரை வரை நடைபயணம் மேற்கொண்டவன்’’ என்று யாரும் கேட்காமலேயே தனது பயோ டேட்டா வை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். திருவாளர் எச். ராஜா முதல், புதிதாக முளைத்துள்ள யூ-டியூபர்கள் வரை ஆர்எஸ்எஸ்/பிஜேபி-யின் வாட்ஸப் வீரர்கள் பலர் அறநிலையத்துறைக்கு எதிராக, முற்றி லும் உண்மைக்குப் புறம்பான பல பொய்ச் செய்திகளை அவ்வப்போது சமூக ஊடகங்க ளில் உலவ விட்டுக் கொண்டிருப்பதைக் காண லாம்.
இதற்கு மத்தியில் தான் சில நாட்களுக்கு முன்பு, தமிழகத்தில் தீபத் திருவிழாவிற்குப் பெயர்பெற்ற திருவண்ணாமலை நகரிலி ருந்து வந்த ஒரு செய்தி கண்ணில் பட்டு கவ னத்தை ஈர்த்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலின் வடக்கு கோபுரத்திற்கு எதிர்புறம் இருக்கும் அம்மணி அம்மன் மடத்தையொட் டிய, இன்றைய தினம் ஏறத்தாழ 50 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்புடைய, 23800 சதுர அடி இடம், ஆக்கிரமிப்புப் பேர் வழிகளிடமிருந்து அறநிலையத் துறையால் அண்மையில் மீட்கப்பட்டுள்ள செய்தி தான் அது. (இந்து தமிழ் திசை 19.03.2023). இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம் என்னவென்றால், இருபதாண்டுகளுக் கும் மேலாக இந்த இடத்தைத் தனது ஆக்கிர மிப்பில் வைத்திருந்ததும், அங்கே 2 மாடி கட்டி டம் எழுப்பி, வீடு, அலுவலகம் என்று பயன் படுத்தி வந்ததும், பிஜேபி மற்றும் இந்து முன்னணியில் முக்கியத் தலைவராக உள்ள டி.எஸ். சங்கர் என்ற வழக்கறிஞர் என்பதே. அம்மணி அம்மன் மடத்து சொத்தைப் பல வருட காலமாக ஆண்டு அனுபவித்து வந்த இந்த வழக்கறிஞர் டி.எஸ்.சங்கர் தான் தற் போது பிஜேபியின் “ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவின்” தமிழ்நாடு மாநில துணைத்தலைவராம்.
தென் தமிழகத்து கிராமங்களில் “யோக்கி யன் வாரான், சொம்பைத் தூக்கி உள்ளே வை” என்று வட்டார மொழியில் பேசப்படுகிற சொலவடை தான் நினைவுக்கு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை நடத்திய நீண்ட சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து மீட்கப்பட்ட அந்த இடத்தில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருந்த கட்டிடமும் சென்ற வாரம் இடித்துத் தள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு ஆக்கிரமிப்பு நில கட்டிடம் இடிக்கப்பட்ட போது, மேற்படி மடத்தின் ஒரு பகுதியும் இடிப்புக்கு ஆளாகியுள்ளது. உடனே ‘கொதித்துப்போன’ இந்து முன்னணி அமைப்பினர் அறநிலையத் துறைக்கு எதிராக ஆவேச ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். யார் தலைமையில் தெரியுமா? 50 கோடி ரூபாய் மதிப்பிலான அறநிலையத் துறைக்குச் சொந்த மான அரசு சொத்தை சட்டவிரோதமாகக் கைய கப்படுத்தி வைத்திருந்த பிஜேபி வழக்கறிஞர் திருவாளர் சங்கர் தலைமையில் தான். (ஏற்கனவே சிதிலமடைந்துள்ள அம்மணி அம்மன் மண்டபம் விரைவில் புதுப்பிக்கப் பட்டு சீரமைக்கப்படும் என்று அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்). ‘‘அறநிலையத் துறை ஏன் அவசியம்?’’ என்பதற்கும், ‘‘அறநிலையத் துறை என்ற ஒன்று இல்லையென்றால் நிலைமை என்ன வாகும்?’’ என்ற கேள்விக்கும் ஒரு சோறு பத மாகக் காட்சி தருகிறது திருவண்ணாமலை நகரின் சமீபத்திய நிகழ்வு.
இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, இந்து மகாசபா, விஸ்வ இந்து பரிஷத், பாரதிய ஜனதா ஆன்மீகப் பிரிவு என்று பல பெயர்களில் உலவிக் கொண்டு, அரசியல் பிழைப்பு நடத்த முயலும் ஆர்எஸ்எஸ்-ன் சூழ்ச்சிகள் குறித்து தமிழக மக்கள், குறிப்பாக கோடானுகோடி பக்தர்கள், எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். தமிழகத்தில் சென்ற நூற்றாண்டில் ஆலய நுழைவுப் போராட்டம் நடைபெறுவதற்கு முன்பே, ஆலயங்களையும், அவற்றின் பல்லா யிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக் களையும் அபகரித்திடும் கும்பலிடமிருந்து பாதுகாத்திட வேண்டி நடத்தப்பட்ட பல இயக் கங்கள் குறித்த தகவல்களும், அவற்றின் நீட்சி யாக இந்து சமய அறநிலையத்துறை உரு வாக்கம் பெற்ற வரலாறும், அதன் பயனா கவே கோயில் சொத்துக்கள் கொள்ளை போவது தடுக்கப்பட்ட சரித்திரமும் அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் உரிய முறையில் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
- கடம்பவன மன்னன்