states

இராஜாராம் மோகன்ராயின் 250-வது பிறந்த நாள் விழா

கொல்கத்தா, மே 23- இராஜாராம் மோகன்ராயின் 250-வது பிறந்த நாளை முன்னிட்டு கொல்கத்தாவில் அவரது சிலையை ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி திறந்து வைத்தார்.  கிழக்கு கலாச்சாரத் துறை அமைச்சகம் சார்பில் வங்கதேசம் ஆளுநர் முன்னிலையில் இராஜாராம் மோகன்ராயின் நூலகத்தின் 50ஆவது ஆண்டும் கொண்டாடப்பட்டது.  நிகழ்ச்சியில் ஒன்றிய சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி பேசு கையில், இராஜாராம் மோகன்ராயின் 250வது பிறந்த நாளை முன்னிட்டு இந்தியாவிற்கு அவர் ஆற்றிய பங்களிப் பிற்காக இந்தியா மற்றும் பிரதமரின் சார்பில் நன்றிக் கடனை தெரிவித்துக் கொள்கிறேன். சமூக சீர்திருத்தவாதி இராஜாராம் மோகன்ராயின் நூலகம் 50  வருடத்தை கடந்துள்ளது என்று கூறினார்.