சென்னை,ஜூன் 13- இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் வகையில் மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கு பொது கலந்தாய்வை அறிவித்துள்ள தேசிய மருத்துவ ஆணையத்தின் செயலுக்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரி வித்துள்ளது. இந்த அறிவிப்பை உடனே திரும்பப்பெற வேண்டும் என்று வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.அரவிந்தசாமி, மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: இந்தியா முழுவதும் இளநிலை மற்றும் முது நிலை மருத்துவப் படிப்பிற் கான மருத்துவ சேர்க்கை அனைத்தை யும் பொதுக் கலந்தாய்வு மூலம் தேசிய மருத்துவ ஆணையமே நிரப்பும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித் துள்ளதை இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த முடிவு மாநில உரிமைகளை சீர்குலைக்கும் நடவடிக்கை ஆகும். தமி ழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடை முறையில் உள்ள இடஒதுக்கீட்டு முறை யை முற்றிலும் ஒழித்துக் கட்ட வழி வகுக்கும் ஆபத்தான திட்டமாகும். இது குறித்து மாநில அரசுகளுடன் எந்த வொரு கலந்தாலோசனையோ ஜன நாயக முறைப்படி விவாதமோ இன்றி ஒன்றிய அரசு இம்முடிவை தன்னிச்சை யாக எடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை தான் ஏற்படுத்தியுள்ளது.
இதுவரையில் இளநிலை மருத்து வப் படிப்புகளில் சேர்வதற்காக தமிழ் நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 15 சதவீதம், முதுநிலை படிப்புகளுக்கு 50 சதவீதம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி 100 சதவீதம் என அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கப்படு கிறது. மீதமுள்ள இடங்கள் மாநில அரசு மூலம் நிரப்பப்படுகின்றன. தமிழக மாணவர்களுக்கு போதிய இடம் கிடைக்காததால், தமிழகத்தில் அகில இந்திய ஒதுக்கீட்டை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், மொத்த மருத்துவ சேர்க்கை இடங்களையும் ஒன்றிய அரசு கபளீகரம் செய்ய முயல்வது சமூக நீதிக்கு எதிரான செயலாகும். தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீ டும் பின் பற்றப்படுவதோடு, பட்டியல் இன மாணவர்கள் இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீ டும், பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக் கீட்டில் இஸ்லாமியர்க்கு உள்ஒதுக்கீ டும் உள்ளது. மேலும் அரசுப் பள்ளி களில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடும் அவர்களுக்கு மாநில அரசே கட்டணம் செலுத்தும் முறையும் உள்ளது. தேசிய கலந்தாய்வு நடைபெற்றால் இட ஒதுக்கீடு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடம் என அனைத்தும் உரிமைகளும் பறி போகும். மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து இடங்களையும் ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டால் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் குறையும். அதிக மருத்துவக்கல்லூரியை கொண்ட தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக மருத்துவ மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எனவே இந்திய மாண வர் சங்கம் பொது கலந்தாய்வு முடிவை வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த முடிவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.