states

img

பி.எஸ்.ஆர் எனும் மக்கள்போராளி

ஒன்றாக இருந்த சென்னை மாகாணத்தின் தெற்கு கன்னட பகுதியைச் சேர்ந்த படகராவில் ஒரு நடுத்தர  குடும்பத்தில் பீ.சீனிவாசராவ் பிறந்தார்.  1930-ஆம் ஆண்டு தனது கல்லூரி படிப்பை விட்டுவிட்டு இந்திய சுதந்திரப்  போராட்டத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட நெருக்கமான உறவின் பின்னணி யில் தமிழகத்தில் விவசாயிகளையும், தொழிலாளர்களையும், இதர உழைக்கும் மக்களையும் தேசிய இயக்கத்திற்கு கொண்டுவரும் முயற்சியில் தோழர்கள் பி.ராமமூர்த்தி, ப.ஜீவானந்தம், ஏ.எஸ்.கே. அய்யங்கார், சி.எஸ்.சுப்பிரமணியன் ஆகி யோர் செயல்பட்டார்கள். அவர்களுடன் இணைந்து பி.எஸ்.ஆரும் பணியாற்றினார்.  1952 ஏப்ரல் 30 அன்று தலைமறைவாக இருந்த பி.சீனிவாசராவ் நீதிமன்றத்தில் ஆஜ ராகி ஜாமீனில் வெளிவந்தார். வந்த அடுத்த நிமிடம் தஞ்சை மாவட்டத்தில் இயக்கப் பணி களை பகிரங்கமாக செய்ய ஆரம்பித்தார். பிறகு தஞ்சை மாவட்டம் முழுவதும் விவ சாயிகளையும், விவசாயத் தொழிலாளர் களையும் தட்டி எழுப்பினார். விவசாயி களையும், விவசாயத் தொழிலாளர்களை யும் ஒரே அமைப்பாக வைத்து செயல் படுத்தினார். நிலப்பிரபுக்களின் நெருக்கடி யிலும், பண்ணையார்களின் தாக்குதலி லும் செய்வதறியாது திகைத்து நின்ற நேரத்தில்தான் தோழர் பி.எஸ்.ஆரின் பார்வை அவர்கள் மேல்பட்டது.  உழைப்பாளி மக்கள் தங்கள் வேத னைகளை பி.எஸ்.ஆரிடம் கொட்டி தீர்த்துக் கொண்டனர். அவர்களின் மனக்குமுறல் களை வெளிப்படுத்திக் கொண்டனர். பி.எஸ்.ஆர் தஞ்சை மண்ணில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு பாவம், அவர் களின் மன உளைச்சல்கள் காற்றில் கலந்த ஓசையாகவே இருந்தது. தங்களின் அடிமை வாழ்விற்கு வழி கிடையாதா? நம்முடைய விடியலுக்கு ஒளி கிடை யாதா? வாழ்நாள் முழுவதும் வேதனை யில் வெந்து மடிந்துதான் ஆக வேண்டுமா? நம்பிக்கை ஒளி எங்காவது தென்படுமா? என்று ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தான் தோழர் பி.எஸ்.ஆரின் வருகை அவர்களுக்கு விடிவெள்ளியாக மாறியது.   இந்நிலையில் இப்படி ஊமைகளாய், அடிமைகளாய் வாழ்ந்த மக்கள் மத்தியில் மிகப்பெரும் பேரெழுச்சியை உருவாக்கி னார் பி.எஸ்.ஆர். நமக்காக எவருமில்லை  என்று எண்ணியிருந்த அந்த மக்களின் சக்தியை அவர்களுக்கே உணரச்செய்தவர் தான் தோழர் பி.எஸ்.ஆர். அடுக்கப்பட்ட மூட்டைகளின் அடிமூட்டையாக கிடந்த  உழைப்பாளி மக்களை பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிராகவும், சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராகவும் ஒருங்கிணைத்து திறம்பட நடத்தி தஞ்சை மண்ணில் செங் கொடி இயக்கத்தை வலுவாகக் கட்டியவர் தோழர் பி.எஸ்.ஆர். கிராமப்புறங்களில் ஏழை விவசாயிகளையும், விவசாய தொழி லாளர்களையும், பணக்கார விவசாயி களில் ஒரு பகுதியினரையும் வென்றெடு த்து அவர்களை ஒரே அணியில் திரட்டி சாதிய ஒடுக்குமுறை வர்க்க ஒடுக்கு முறை ஆகிய இரண்டுக்கும் எதிரான போரா ட்டத்தை விடாப்பிடியாக நடத்தியவர் தோழர் பி.எஸ்.ஆர். இந்தியாவில் வர்க்க ஒடுக்குமுறை க்கும், சாதிய ஒடுக்குமுறைக்கும் உள்ள இணைப்பை மிகத்துல்லியமாக ஆரா ய்ந்து முதலில் தெரிவித்த காரல்மார்க்ஸ் அவர்களின் வழிகாட்டலில் நின்று உறுதி யாக போராடியவர் தோழர் பி.எஸ்.ஆர்.  பிரிட்டீஷ் எதிர்ப்பு போராட்டத்தையும், கிராமப்புற ஏழைமக்களின் பொருளாதார, சமூகப் பிரச்சனைகளுக்கான போராட்டங் களையும் கவனமாக இணைத்து நடத்திய இடங்களில் செங்கொடி தளங்கள் உருவா னது என்று மாபெரும் தலைவர் ஹர்கிஷன்  சுர்ஜித் கூறுவார். அதன் அடிப்படையில் தான் கீழத்தஞ்சையில் இன்றைக்கும் செங்கொடி தளம் வலுவாக உள்ளது. இதற்கு அடித்தளம் இட்டவர் தோழர் பி.சீனிவாசராவ். 

இன்று  பி.எஸ்.ஆரின்62-ஆம் ஆண்டுநினைவுநாள்