புதுக்கோட்டை, அக்.23- புதுக்கோட்டை கீழராஜவீதியில் வர்த்தக வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. வர்த்தக வணிக நிறுவனங்களை தவிர தீபாவளி பண்டிகையை மட்டும் நம்பி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட தரைக்கடை வியாபாரிகள் தங்களது கடைகளை அமைத்து விற்பனையில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருக்கக்கூடிய கிராமப் பகுதி மக்கள் ஆடை முதல் ஆபரணம் வரை அனைத்து விதமான பொருட்களை வாங்க குவிந்தனர். அதைப்போல் சாலையோர வியாபாரி களுக்கும் வியாபாரம் அளிக்க வேண்டும் என்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிசென்றனர்.