சென்னை,பிப்.22- கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தது தொடர்பான வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக் கோரி மாணவி யின் தாய் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என சென்னை உயர் நீதி மன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்த வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப் பட்டது. அதன்படி சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக் கோரி மாணவியின் தாய் செல்வி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “சிபிசிஐடி விசாரணை நியாய மாக இல்லை. கொலைக் குற்றச்சாட்டின் கீழ் இன்னும் வழக்குப் பதிவு செய்யப்பட வில்லை. கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை சிபிசிஐடி காவலர்கள் மறைத்துள்ளனர்.
கண்காணிப்புக் கேமரா பதிவுகள் எனக்கு காட்டப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்து கிறது. மேலும், சம்பவம் நடந்த இடம், ஆதாரங்களின் தடயம் தெரியாத அளவுக்கு முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன” என்று மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், “சம்பவம் நடந்த போது மாணவியின் தந்தை சிபிசிஐடி விசா ரணை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நிலுவையில் இருப்பதால், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. மேலும், மாணவியின் செல்போன் தடயவியல் ஆய்வு அறிக்கையை பெற்ற பின், இறுதி அறிக்கை தாக்கல் செய்வதற்கு நீதிமன்றம் நான்கு வார கால அவகாசம் வழங்கி யுள்ளது” என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மாணவி யின் தாய் தாக்கல் செய்த மனுவை, ஏற்க னவே நிலுவையில் உள்ள வழக்குடன் சேர்த்து மார்ச் 8 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.