states

தமிழக மீனவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிச்சூடு

இராமநாதபுரம்,அக்.21- கோடியக்கரை அருகே நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.   காரைக்காலில் இருந்து அக்டோபர் 15 ஆம் தேதியன்று ஒரு படகில் 10 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். 21 ஆம் தேதி நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது ஹெலிகாப்டரில் வந்த கடற்படையினர் படகை நிறுத்த அறிவுறுத்தினர். ஆனால் படகு நிற்காமல் சென்றதால். மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் 10 மீனவர்கள் காயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து, இந்திய கடற் படைக்கு சொந்தமான விமானப்படை இராமநாதபுரம் அருகே உச்சிப்புளியில் ஐ.என்.எஸ் பருந்து கடற்படைக்கு சொந்த மான ஹெலிகாப்டர் மூலம் சென்று காயத்துடன் இருந்த 10 மீனவர்களை அழைத்து வந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், மயிலாடுதுறை மாவட்டம், மானகிரி பகுதியை சேர்ந்த மீனவர் வீரவேல் காலில் குண்டு இருந்த தால் கடற்படையினர் இராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர்.  உயிருக்கு ஆபத்து  இல்லை என மருத்துவர்கள் தெரிவித்த னர். மேலும் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு மீனவர் கொண்டு செல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டை இந்திய கடற்படையினர் நடத்தியதாக காய மடைந்த மீனவர் தெரிவித்த நிலையில் இந்திய கடற்படையினர் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சிறிய காயமடைந்த 9 மீனவர்கள் கடற்படை முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.