அரியலூர், மார்ச் 14- அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ சேவையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரங் கத்திற்கு “அனிதா நினைவு அரங்கம்” என்ற பெயர் பொறிக்கப்பட்ட பெயர் பலகையை யும் திறந்து வைத்தார். பின்னர் 2,539 பய னாளிகளுக்கு ரூ.13.68 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ஆம் தேதி பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்ச ரால் காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செவ் வாய்க்கிழமை அரியலூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையின் பல்வேறு சேவைகளை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 700 படுக்கை வசதிகளு டன் ஐந்து தளங்களைக் கொண்டது என்ப தும் மருத்துவக் கல்லூரியில் சென்ற கல்வி யாண்டில் இளங்கலை மருத்துவப் படிப்பிற்கு 149 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு “அனிதா நினைவு அரங்கம்” என்று பெயர் சூட்டப்படும் என்ற அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனிதா நினைவு அரங்கத்தை திறந்துவைத்தார். நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி, சிதம்பரம் மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன், மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்தி மலர், சட்டமன்ற உறுப்பி னர்கள் கு.சின்னப்பா (அரியலூர்), க.சொ.க. கண்ணன் (ஜெயங்கொண்டம்), பிரபாகரன் (பெரம்பலூர்), அரியலூர் நகர்மன்றத் தலை வர் சாந்தி, அரியலூர் அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனை முதல்வர் முத்துகிருஷ் ணன், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத் துவக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.