சென்னை, ஆக.30- தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். புதனன்று(ஆக.30) காலை நடை்பயிற்சி முடித்துவிட்டு சென்னை, சைதாப்பேட்டை யில் தனது வீட்டில் பார்வையாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது அமைச்சர் லேசான மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது உதவியாளர்கள் அவரை உடனடியாக கிண்டியிலுள்ள கருணாநிதி உயர் சிறப்பு மருத்து வமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோ பரி சோதனையில் எவ்வித அடைப்பும் இல்லை என மருத்துவ மனை அறிக்கையில் தெரிய வந்தது. இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிற்பகல் 2.10 மணியள வில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். சர்க்கரை யின் அளவு குறைடந்ததால் மயக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரி வித்தார்.