states

தீக்கதிர் விரைவு செய்திகள்

மதுரை பதிப்புவங்கக் கடலில்  காற்றழுத்த தாழ்வுப்பகுதி

சென்னை, நவ. 19 - தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நவம்பர் 21-ஆம் தேதி வாக்கில், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 23-ம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதி களில் காற்றழுத்த தாழ்வு  மண்டலமாக வலுபெறக் கூடும், என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 6 நாட்களாக பரவ லாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.

நவ. 24-ல்  நாடாளுமன்ற  அனைத்துக்  கட்சிக் கூட்டம்!

புதுதில்லி, நவ. 19 - நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25 அன்று துவங்கி டிசம்பர் 20 வரை நடைபெறஉள்ளது.  இந்நிலையில், குளிர்காலக் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்து வது குறித்து, நாடாளுமன்ற வளாகத்தில் நவம்பர் 24  அன்று காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்து க்கு, நாடாளுமன்ற விவகா ரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அழைப்பு விடுத்துள் ளார். முன்னதாக இந்த குளிர்காலக் கூட்டத் தொடரில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவையும், தற்போது நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வில் உள்ள வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவையும், எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி தாக்கல் செய்வதென 

பிஷ்னோய் இளைய சகோதரர் அமெரிக்காவில் கைது

மும்பை, நவ. 19 - குஜராத்தின் சபர்மதி சிறையில் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் உள்ளார்.  சிறையில் இருந்த படியே அவர் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். லாரன்ஸ் பிஷ்னோயின் இளைய சகோதரர் அன்மோல் மீதும் ஏராள மான வழக்குகள் நிலுவை யில் உள்ளன. தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக் கொலை வழக்கிலும் அன்மோல் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.  இந்நிலையில் அவர் அமெரிக்காவின் கலிபோ ர்னியாவில் பதுங்கி யிருப்பதாக கிடைத்த தகவ லின் பேரில், அவரை கைது செய்து இந்தியா வுக்கு திருப்பி அனுப்பும்படி இந்திய அரசு அமெரிக்கா விடம் கோரியது. அன்மோ லுக்கு எதிராக ரெட் நோட்டீ ஸையும் இண்டர்போல் வெளியிட்டிருந்தது. இந்த சூழலில் கலிபோர்னியாவில் அன்மோல் கைது செய்யப் பட்டுள்ளார். 

டாஸ்மாக் டிரான்ஸ்போர்ட்  டெலிவரி சுமைப்பணி தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பு

சேலம், நவ.19- டாஸ்மாக் குடோன் சுமைப்பணித் தொழி லாளர் சங்க மாநில ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் திங்களன்று சேலத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதுமுள்ள 43 டாஸ்மாக் குடோன்களிலிருந்து மதுபானப் பெட்டிகளை விநியோக மையங்களுக்கு சரக்கு வாக னத்தில் கொண்டு செல்லும் சுமைப்பணி தொழிலாளர்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், சிஐடியு சேலம் மாவட்டக்குழு அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு டாஸ்மாக் சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாநில ஒருங்கிணைப்புக் குழு துணை கன்வீனர் அ.பிச்சைமுத்து தலைமை வகித்தார். கன்வீனர் எஸ்.குண சேகரன் துவக்கவுரையாற்றினார். இதில்  பங்கேற்ற டாஸ்மாக் குடோன் சுமைப்பணித் தொழிலாளர்கள், தாங்கள் சந்திக்கின்ற பிரச்ச னைகள் குறித்து பேசினர்.  இதனைத்தொட ர்ந்து, சம்மேளன பொதுச்செயலாளர் இரா.அருள்குமார் தொகுப்புரையாற்றினார்.  இக்கூட்டத்தில், டாஸ்மாக் டிரான்ஸ்போர்ட் சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு வேலை பாதுகாப்பு, வேலை உத்தரவாதம், பிஎப், இஎஸ்ஐ, போனஸ், அடையாள அட்டை, சட்டப்படியான குறைந்தபட்ச மாத சம்பளம், கடைகளில் அடுக்கி வைப்பதற்கு அட்டிக்கூலி போன்றவைகளை டிரான்ஸ்போர்ட் ஒப்பந்ததாரர் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட   தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.  இதையடுத்து டாஸ்மாக் டிரான்ஸ்போர்ட் டெலிவரி சுமைப்பணி தொழிலாளர்கள் மாநில ஒருங்கிணைப்புக்குழு (சிஐடியு) அமைக்கப்பட்டது. கன்வீனராக இரா.அருள்குமார் மற்றும் 20 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு  தேர்வு செய்யப்பட்டது.சம்மேளன மாநில துணைச்செயலாளர் அ.கோவிந்தன், சம்மேளனக்குழு உறுப்பி னர்கள் முகமதுல்லா, நெல்லை முருகேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சுமைப்பணி சம்மேளன மாநிலத் தலைவர் ஆர்.வெங்கடபதி நிறைவுரையாற்றினார். முடிவில், சம்மேளனக்குழு உறுப்பினர் முனீஸ்வரன் நன்றி கூறினார்.