ராய்ப்பூர், பிப்.25- நாட்டில் வெறுப்புத் தீயைப் பரப்பும் பாஜக ஆட்சியை வலி மையுடன் எதிர்கொள்வோம் என்று காங்கிரஸ் தொண்டர் களுக்கு மூத்த தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். ராய்ப்பூரில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் 85- ஆவது மாநாட்டில் பங்கேற்று சோனியா காந்தி உரையாற்றி னார். அப்போது அவர் கூறி யதாவது: ‘பாஜக வெறுப்பு தீயை பரப்புகிறது. நமது அரசியல் சாசனத்தின் மதிப்பை அவ மதிக்கும் வகையில் பாஜக அர சின் செயல் உள்ளது. குறிப் பாக, சிறுபான்மையினர், பெண் கள், தலித்துகள், பழங்குடியி னரை பாஜக கொடூரமாக குறி வைக்கிறது. ‘பாஜக ஆட்சியை நாம் வலி மையுடன் எதிர்கொள்ள வேண் டும். மக்களிடம் சென்று நமது கருத்துக்களை தெளிவாக கூற வேண்டும். காங்கிரஸ் ஒரு அர சியல் கட்சி மட்டுமல்ல; இது அனைத்து மதங்கள், அனைத்து சாதிகள், அனைத்து பாலி னங்களின் குரலை பிரதிபலிக் கும் இயக்கம். நாட்டு மக்கள் அனைவரின் கனவுகளையும் காங்கிரஸ் கட்சி நனவாக்கும். ஒவ்வொரு அமைப்பையும் கைப்பற்றி... இது காங்கிரசுக்கும் ஒட்டு மொத்த நாட்டிற்கும் சவாலான காலம். நாட்டின் ஒவ்வொரு அமைப்பையும் தாக்கி, திசை திருப்பி அதை பாஜக - ஆர்எஸ்எஸ் கைப்பற்றி நாச மாக்கி வருகிறது. பிரதமர் நரேந் திர மோடியும், பாஜகவும் ஒவ் வொரு நிறுவனத்தையும் கைப் பற்றியுள்ளனர். தொழிலதிபர் கவுதம் அதா னியின் வணிக சாம்ராஜ்யம் தொடர்பான சர்ச்சையில் தொழிலதிபருக்கு ஆதரவாக பாஜக அரசு பொருளாதார அழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ஒற்றுமை யாத் திரை கட்சிக்கு மிகப் பெரிய திருப்புமுனை. மன்மோகன் சிங் தலைமையில் 2004 மற்றும் 2009 மக்களவை வெற்றி எனக்கு தனிப்பட்ட முறையில் திருப்தி அளித்தது. ஆனால், காங்கிரசின் திருப்பு முனை யான பாரத் ஒற்றுமை யாத்தி ரையுடன் எனது இன்னிங்ஸ் நிறைவடைவதுதான் எனக்கு பெருமகிழ்ச்சி.’ இவ்வாறு சோனியா காந்தி பேசியுள்ளார்.