states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கட்ச், கொங்கண் பகுதி களில் குறைந்தது 2 நாட் களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும் எனவும், நடப்பாண்டின் தொடக்கத்திலேயே வட மாநிலங்களில் வெப்ப அலை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எச்சரிக் கைக்கு முன்னரே குஜ ராத், ராஜஸ்தான், பஞ் சாப், இமாச்சல், ஹரி யானா, சண்டிகர், தில்லி,  உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், லடாக்  ஆகிய 11  பகுதிகளி லும் இயல்பை விட அதி கமான வெப்பநிலை காணப்பட்டு வருகிறது. தில்லியில் பிப்ரவரி மாத சராசரியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு திங்களன்று 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடை யிலான முக்கிய வர்த்தகப் பாதை எல்லையான “டோர்காம்” எல்லை மூடப்பட்டுள்ளது. ஆனால் இருநாடுகளில் எந்த நாட்டு அரசு எல்லை யை மூடியது என திட மாக தகவல் வெளியாக வில்லை. எனினும் எல்லை பகுதியில் துப்பா க்கிச் சூடு சத்தம் கேட்ட தாகவும், அதிலிருந்து எல்லை மூடப்பட்டதாக வும் “டோர்காம்” பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தில்லியிலிருந்து தியோ கர் (ஜார்க்கண்ட்) நோக்கி சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தி ற்கு வெடிகுண்டு மிரட் டல் வந்ததை அடுத்து உத் தரப்பிரதேச தலைநகர் லக்னோவிற்கு அவசர அவசரமாக தரையிறக்கப் பட்டது. பின்னர் லக்னோ விமான நிலைய  அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இது வெறும் புரளி என தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.6 கோடி பண மோசடி புகாரில் கரூர் அன்பு நாதன் என்பவரை குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப் பட்டுள்ள கரூர் அன்பு நாதன் அதிமுக முன் னாள் அமைச்சர்களுக்கு மிகவும் நெருக்கமான நபர் ஆவார்.

பட்டப் பகலில் அதுவும் பொது இடத்தில் அடித்து கடத்துவது போன்ற சம்பவங்களை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. குஜராத் பெண் கிருத்திகா கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் கோரிய பெற்றோரின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டுள்ளது.

தில்லியில் ரேபிடோ, உபர், ஓலா ஆகிய “இரு சக்கர வாகன டாக்சி” சேவைகளை ரத்து செய்வ தாகவும், தடையை மீறி னால் ரூ.10,000 அபராத மும், ஓராண்டு சிறை யும் விதிக்கப்படும் என  தில்லி அரசு அறிவித்துள் ளது. இருசக்கர வாகன டாக்சியில் வேலை வா ய்ப்புகள் பெருகினாலும், பயணிகளின் பாதுகாப் பில் எவ்வித சமரசமும் செய்ய முடியாது என தடைதொடர்பாக தில்லி அரசு விளக்கம் அளித்துள்ளது.

உலகச் செய்திகள்

பசிபிக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை பெரு நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும் போலுவார்ட்டேயிடம் ஒப்படைக்க விரும்பவில்லை என்று மெக்சிகோவின் ஜனாதிபதி ஆண்ட்ரூஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடார் (அம்லோ) கூறியுள்ளார். ஒற்றுமைப்ப டுத்த வேண்டிய இடத்தில் ஒரு போலியான நிர்வாகத்தை அமர்த்துவதை நான் விரும்பவில்லை என்று தெரிவித்த அவர், ‘‘விடுதலை மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான கலகத்திற்கு அங்கீகாரம் கொடுக்க முடியாது’’ என்று குறிப்பிட்டார்.

குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதாக பிரேசிலின் ஜனாதிபதி லூலா டி சில்வா அறிவித்துள்ளார். இந்த உயர்வு மே மாதம் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது. குறைந்த பட்ச ஊதியத்தை 1,320 ரியால்களாக(254 டாலர்) அதிகரிதது அறி விப்பு வந்துள்ளது. விலைவாசி உயர்வை மட்டுமில்லாமல், உள்நாட்டு  உற்பத்தி அதிகரிப்பையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் போவதாக வும், அதுதான் பொருளாதார வளர்ச்சியை நியாயமான முறையில் பங்கிட்டுக் கொள்ள வழிவகுக்கும் என்றும் லூலா தெரிவித்தார்.

கொரியப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தும் போர்ப் பயிற்சிகளில் அமெரிக்காவும், தென் கொரியாவும் கூட்டாக ஈடுபட்டன. இவர்களின் பதற்றம் ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு பதிலளிக்கும் வகையில் கண்டம் விட்டுக் கண்டம் தாவித் தாக்கும் ஏவுகணையை ஏவி வடகொரியா பரிசோதனை செய்திருக்கிறது. போர்ப் பயிற்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்க  மாட்டோம். தக்க பதிலடி தரப்படும் என்று வடகொரியா எச்சரித்திருக்கிறது.