சென்னை,ஜன.12- தமிழ்நாடு சட்டப்பேரவையில் சேது கால்வாய் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு உடனடியாக நிறைவேற்ற வலி யுறுத்தி அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை ஆதரித்தும் விவாதத்தை துவக்கி வைத்த தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முரு கன்,“தமிழ்நாட்டின் 150 ஆண்டு கால கனவு திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வந்தபோது சனாதான சக்திகள் அங்கு ராமர் பாலம் இருப்பதாகவும் அந்த பாலம் பாதிக்கப்படும் என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர்”என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் மாரிமுத்து,“ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்மா னத்தை வரவேற்கிறோம். சேது கால்வாய் திட்டம் நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்களின் கனவுத் திட்டம். காலனி ஆதிக்கம் தொடங்கிய காலத் தில் இருந்தே இதற்காக போராடி வந்துள்ளனர்.
மகத்தான இந்த திட்டத்தை ராமரின் பெயரால் அரசியல் ஆதாயம் தேடுவோரும், மூடநம்பிக் கையால் பாதிக்கப்பட்டவர்கள் தான் தடையாக இருந்தார்கள்” என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நாகை மாலி, ராமாயணம் என்பதும் முழுக்க முழுக்க கற்பனைக் கதை. ராமர் பாலம் என சொல்லி ஒன்றிய அரசு இத்திட்டத்தை கிடப்பில் போட்டது. கற்பனைகளும் நம்பிக்கை களும் வரலாறு ஆகாது” என்றார். அப்போது பேசிய சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “சேது கால்வாய் திட்டம் கொண்டு வந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். ஆனால் இந்த திட்டத்தை மத நம்பிக்கை குறித்து விமர்சிக்கவோ, ராமர் மற்றும் ராமாயணத்தை பற்றியோ பேசுவதை தவிர்க்க வேண்டும். தெய்வமாக வழிபடும் ராமர் குறித்து மூட நம்பிக்கை என்ற பேச்சு வரக்கூடாது.
இதனை ஏற்க முடியாது. அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்றார். அப்போது குறுக்கிட்ட முதலமைச் சர், “யாரும் தெய்வத்தைப் பற்றியோ மதத்தைப் பற்றியோ குறை சொல்ல வில்லை. இதனைப் பயன்படுத்தி தடுத்து விட்டனர் என்று தான் பேசி னர். யாரும் விமர்சித்து பேசவில்லை” என்றார். அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை பேசும்போது,“ ராமாயணம் சிறந்த கற்பனைக் கதை என்பதை மகாத்மா காந்தியும், நேருவும் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்கள்” என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், “100 கோடிக்கும் அதிகமான மக்கள் பின்பற்றும் ராமர் என்பவர் கற்பனை பாத்திரம் என்று அவையில் பதிவாகி யிருப்பது எங்கள் மனதை புண்படுத்து கிறது. ராமர் என்பவர் அவதார புருசர்” என்று குறிப்பிட்டார். உறுப்பினர்கள் யாருமே அவர் களது கருத்தை தெரிவிக்கவில்லை. மற்றத் தலைவர்கள் தெரிவித்ததை மேற்கோள் காட்டினார்கள். எனவே, அதை நீக்க வேண்டியதில்லை. இரு தரப்பு வாதங்களும் இடம்பெறட்டும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு இந்த விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.