- நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக ஜியோ சேவை முடங்கியுள்ளது. தில்லி, மும்பை, கொல் கத்தா, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங் களில் 63 சதவீத ஜியோ வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தொலை பேசி, இணைய சேவை யினை பெறமுடிய வில்லை என புகார் தெரி வித்துள்ளனர். மேலும் சமூக வலைத்தளங்களில் #jiodown என்ற ஹேஸ் டேக்கும் டிரெண்ட் ஆகி வருகிறது.
- ஜனவரி 1-ஆம் தேதி முதல் சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் நாடுகளில் இருந்து வரும் பயணி களுக்கு கொரோனா நெக ட்டிவ் சான்றிதழ் கட்டா யம். சான்றிதழ்களை ஏர் சுவிதா (AIR SUVITHA) இணையதளத்தில் பதி வேற்ற வேண்டும் என ஒன்றிய அரசு உத்தர விட்டுள்ளது.
- ஆந்திர மாநிலம் பா பட்லா மாவட்டத்தின் தேசிய நெடுஞ்சாலை யில் திடீரென போர் விமானங்கள் தரையிறங் கின. இந்த சம்பவம் குறித்து பதற்றம் ஏற்பட்ட நிலையில், அவசர காலங் களில் போர் விமானங் களை தேசிய நெடுஞ் சாலைகளில் தரை யிறக்குவது போன்ற ஒத்திகைகளை இந்திய விமானப்படை மேற் கொண்டதாக குரூப் கேப் டன் அர்.எஸ் செளத்ரி விளக்கம் அளித்துள்ளார்.
- புத்தாண்டு கொண்டா ட்ட ங்களுக்காக 30-க்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து மாற்றம், கொண்டாட்ட முறை விதிகள் தொடர்பான ஆலோசனைகளை தில்லி போக்குவரத்து காவல்துறை வெளி யிட்டது.
- தெலுங்கானா டிஜிபி-யாக இருக்கும் மகேந் திர ரெட்டியின் பதவிக் காலம் டிசம்பர் 31-ஆம் தேதியோடு நிறைவு பெறும் நிலையில், ஐபி எஸ் அதிகாரி அஞ்சனி குமார் தெலுங்கானா காவல்துறை இயக்குந ராக (டிஜிபி - பொறுப்பு) நியமனம் செய்யப் பட்டுள்ளார்.
- ஒடிசாவுக்கு சுற்றுலா வந்த ரஷ்யாவின் நாடா ளுமன்ற உறுப்பினர் பாவெல் ஜென்ரிகோவிச் ஆன்டோவ் மரணம் தொடர்பாக நான்கு அதி காரிகள் கொண்ட மற் றொரு குற்றப்பிரிவு குழு அமைக்கப்பட்டு ராய கடா பகுதிக்கு அனுப்பப் பட்டுள்ளது என ஒடிசா காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
- வனத்துறையின் வனப் படையை நவீனப்படுத்த ரூ.52.83 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளி யிட்டது தமிழ்நாடு அரசு. இந்த வனப்படை திட்டத்தை 3 ஆண்டு களுக்குள் செய்து முடிக்க திட்டமும் வகுக்கப்பட்டு ள்ளது.
- டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரன் தலை மையில் மாநில பொருளா தார ஆலோசனை குழு அமைக்கப்பட உள்ளதாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார்.
- புதிதாக 10 ஆயிரம் மெகாவாட் அளவிலான மின்சாரத்தை தயார் செய்வதற்கான ஏற்பாடுகளை ஈரான் செய்து வருகிறது. எட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்தில், முதல் கட்டமாக நான்கு மின்னுற்பத்தி உலைகளை அமைக்கப் போகிறார்கள். ஏற்கனவே சில மின்னுற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட்டு வெற்றிகர மாக இயங்கி வரும் நிலையில், அந்த அனுபவங்களோடு புதிய ஆலை களையும் அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
- ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவிற்கு அமைதிப்பணி களுக்காகத் தனது படைகளை தெற்கு சூடான் அனுப்பி யுள்ளது. 720 வீரர்கள் அடங்கிய பிரிவிற்கு நடந்த வழியனுப்பும் விழாவில் தெற்கு சூடானின் ஜனாதிபதி சல்வா கிர் பங்கேற்று வாழ்த்திப் பேசினார். அப்போது, “அமைதிக்காகச் செல்லும் நமது வீரர்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அடுத்த நாட்டுக்கு செல்கிறீர்கள். நம்மால் பிரச்சனைகள் எதுவும் வந்துவிடக்கூடாது” என்று குறிப்பிட்டார். இவர்கள் எந்தப்பகுதியில் பணிபுரிய வேண்டும் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்று காங்கோ தெரிவித்திருக்கிறது.
- 2022 ஆம் ஆண்டில் 24 லட்சம் சுற்றுலாப்பயணிகள் பிலிப்பை ன்சுக்கு வந்தனர் என்று அந்நாட்டின் சுற்றுலாத்துறை அறிவித்துள் ளது. இதன் மூலம் 265 கோடி அமெரிக்க டாலர் வருமானம் தங்களுக்குக் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பினால் எல்லைகள் மூடப்பட்டிருந்தன. பிப்ரவரி மாதத்தில்தான் பயணிகள் உள்ளே வர அனுமதிக்கப்பட்டார்கள். 17 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 24 லட்சம் பேர் வந்ததை சாதனையாகப் பார்க்கிறார்கள்.