states

வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை

சென்னை, ஜூன் 8- தமிழ்நாட்டில் வீட்டு இணைப்பு களுக்கு மின் கட்டண உயர்வு இல்லை என்றும், இலவச மின் சாரச் சலுகைகள் தொடரும் என்றும் அரசு அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் ஒன்றிய அரசின் ஆணையின்படி, இந்த விலை உயர்வினை மின்  கட்டணத்தை உயர்த்தி நுகர்வோர் களிடமிருந்து மாதந்தோறும் பெற வேண்டும். இந்த விலை உயர்வினால் ஏற்படக்கூடிய சுமையைக் குறைக்கும் வகை யில், தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் 9.9.2022 அன்று  2022-23 முதல் 2026-27 வரை 5  ஆண்டுகளுக்கான கட்டண உயர்வை பல்லாண்டு மின் கட்டண வகையில் வழங்கியது.  அந்த உத்தரவில் 2022-23 ஆண்டுக்கான உயர்த்தப்பட்ட கட்டணத்தை அறிவித்தது. அடுத்து வரும் 4 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகை யில் கீழ்க்கண்ட கட்டண உயர்வு முறையை அறிவித்தது.  அதன்படி, ஆண்டுதோறும், ஏப்ரல் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணுடன் ஒப்பீடு செய்து, கணக்கிடப்படும் நுகர்வோர் பணவீக்க உயர்வு அல்லது 6  விழுக்காடு, இவற்றில் எது குறைவோ அந்த அளவில் மின் கட்டண உயர்வை நடைமுறைப் படுத்த வேண்டும். இதன்படி, 2023 ஜூலை மாதத்தைப் பொறுத்தவரையில், 2022 ஏப்ரல் மற்றும் 2023 ஏப்ரல் ஆகியவற்றின் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின்படி கணக்கிட்டால், 4.7 விழுக்காடு மின்  கட்டணம் உயர்த்தப்பட வேண் டும். 

இந்த நடைமுறையை ஆய்வு செய்த முதல்வர், ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தும் போது பொதுமக்கள் பாதிக்கப் படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத் தினார். இதன்படி கட்டண உயர்வு  விகிதம் மறு ஆய்வு செய்யப்பட்டு,  சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கட்டணம் உயர்த்தப் பட்ட நிலையில், 2022 ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணிற்கு பதிலாக சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் விலை  குறியீட்டு எண் கணக்கில் எடுத்துக்  கொள்ளப்பட்டது. இதனால் கட்டண உயர்வின் அளவு 4.7  விழுக்காட்டிலிருந்து 2.18 விழுக்காடாக குறைக்கப்பட்டது.  இந்த குறைந்த உயர்விலிருந் தும் பொதுமக்களை பாது காக்கும் நோக்கோடு, வீட்டு இணைப்பு நுகர்வோருக்கு ஏற்படும் 2.18 விழுக்காடு உயர்வையும் தமிழ்நாடு அரசே ஏற்று, மின் வாரியத்திற்கு மானிய மாக வழங்க முதல்வர் ஆணை யிட்டுள்ளார். இந்த முடிவால் வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது. இலவச மின்சாரம் தொடரும் வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுக ளுக்கு 100 யூனிட் இலவச மின் சாரம், கைத்தறி, விசைத்தறிகள் போன்றவைகளுக்கு அளிக்கப் படும் இலவச மின்சாரச் சலுகை கள் தொடர்ந்து வழங்கப்படும். வணிக மற்றும் தொழில் அமைப்பு களுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை  மிகக் குறைந்த அளவில் மின்கட்ட ணம் உயரும். இந்த ஆண்டு, பிற மாநிலங்க ளில் வீட்டு இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப் புகளுக்கும் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த உயர்வுகளோடு ஒப்பிடும் போது  தமிழ்நாட்டில் வீட்டு மின்இணைப் புகளுக்கு மின்கட்டணங்கள் எவ்விதமும் உயர்த்தப்படாதது மட்டுமன்றி, வணிக மற்றும் தொழில் மின்இணைப்புகளுக்கும் மிகக்குறைந்த அளவிலேயே கட்டணங்கள் உயர்த்தப்பட் டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.