தலைகீழாக தொங்க விடுங்கள், அண்ணாமலை!
அண்ணாமலை ஏன் கூட்டணிக் கட்சியை ஈசிஆர் ரிசார்ட்டுக்கு அழைத்துச் சென்று தேர்தல் குறித்து முடிவு செய்யக்கூடாது? அண்ணா மலை பாணியில் ஓடும் விமானத்தின் எமெர் ஜென்சி கதவைத் திறந்து 4 பேரை தலைகீழாக தொங்கவிட்டு மிரட்டி பாஜக நட்சத்திர வேட்பாளரான தன்னை ஏன் ஆதரிக்கச் சொல்லக்கூடாது.
ஈரோடு கிழக்கில் பாஜகவும் போட்டியிடப்போகும் சூழல் நிலவுவது பற்றி காயத்ரி ரகுராம்
பாஜகவின் முயற்சிகள் வெற்றி பெறாது
கோடிக்கணக்கில் பணம் செலவு செய்தா லும், பாஜகவின் முயற்சிகள் தமிழகத் தில் வெற்றி பெறாது. பாஜக பணம் கொடுத்து கிளை களை அமைக்கிறது. ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டிய ஒன்று. ஆளுநர் மாளிகையை மருத்துவ மனையாக்க காந்தி சொன்னார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
திடீர் புகழ்ச்சி
தமிழ்நாடு என்பதை தமிழர்கள் பெருமையாக கருதுகின்றனர்; இங்குள்ள மக்கள் சிறப்பான வர்கள்; நம் நாட்டின் பிற பகுதிகள், தமிழின் சிறப்பை போதுமான அளவு அறியாதது வருத்தம் அளிக்கிறது; தமிழ் கற்றுக் கொள்ள முயற்சி செய்து வருகிறேன்.
ஐஏஎஸ் அதிகாரிகளிடம் ஆளுநர் ரவி
பகல் கனவு காணாதீர்!
கடவுள்கள் பெயரிலும், சாஸ்திரங்கள் வழியிலும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த சிறு கும்பலின் பிடியிலிருந்த ஆலயங்களையும், அதன் சொத்துக்க ளையும் மீட்பதற்கு நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில், இந்து சமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்ட வரலாற்றை அண்ணாமலை கற்றுணர வேண்டும். கோயில் மனை களில் குடியிருந்து வருபவர்களும், நிலங்களை உழ வடை செய்து வரும் குத்தகை விவசாயிகளும் தான் கோயில் சொத்துக்களைச் சேதாரம் இல்லாமல் பாது காத்து வருகின்றனர். கோயில் நிர்வாகத்தில் ஊடுருவி யுள்ள மத அடிப்படைவாதிகளும், சனாதன சக்திகளும் கடவுள் சிலைகளைக் கடத்துவது, நகை, பணம் போன்ற வற்றில் கையாடல் செய்வது போன்ற குற்றச் செயல் களில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோதமாக ஆக்கிர மித்து வைத்துள்ள கோயில் சொத்துக்களை திமுக அரசு மீட்டு வரும் செய்தியால், ஆத்திரமடைந்த சுயநல சக்திகளின் உணர்வுகளை அண்ணாமலை பிரதி பலித்து, பகல் கனவு காண்கிறார். அவரது எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது.
சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்
தீக்கதிர் விரைவு செய்திகள்
10,000 குஜராத் மாநிலம் சூரத் த்தில் உற்பத்தி வீழ்ச்சி மற்றும் சிறிய யூனிட்கள் மூடப்பட்டதால் 10,000- க்கும் மேற்பட்ட வைர தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். குழந்தை களுக்கான பள்ளிக் கட்ட ணம், அன்றாட வீட்டுச் செலவுகள், வீடு, வாக னக் கடன் போன்ற வற்றை செலுத்த முடியா மல் தொழிலாளர்கள் சிரமப்படுவதாக சூரத் வைரத் தொழிலாளர் சங்கத் தலைவர் ரமேஷ் ஜிலாரியா வேதனை தெரிவித்துள்ளார்.
கோகுல்ராஜ்-சுவாதி சந்தித்த அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு
மதுரை, ஜன.22- கோகுல்ராஜ்-சுவாதி சந்தித்த திருச் செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ். என்.ஆனந்த் வெங்கடேஷ் (ஜனவரி 22) ஞாயிறன்று ஆய்வு மேற் கொண்டனர். சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். இவர் தலித் சமூகத்தவர். இவரும் நாமக் கல் மாவட்டத்தை சேர்ந்த சுவாதி என்பவ ரும் 2015 ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று திருச்செங்கோடு அருகே உள்ள அர்த்த நாரீஸ்வரர் கோவிலில் சந்தித்துள்ளனர் . இதன்பின்னர் கோகுல்ராஜ் கிழக்கு தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத் தில் தலை வெட்டப்பட்ட நிலையில் பிண மாக கிடந்துள்ளார் . இந்த கொலை வழக் கில் சங்ககிரி பகுதியை சேர்ந்த தீரன் சின்ன மலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான 5 பேருக் கும் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி கோகுல்ராஜ் தாயார் மேல்முறையீடு செய்தார் . இந்த விசாரணையில் பிறழ் சாட்சியாக கருதப்பட்ட சுவாதி மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சுவாதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய் தார். ஆனால் உச்சநீதிமன்றம் ஜனவரி 6 அன்று அவரது மேல்முறையீட்டு மனுவை விசாரித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டது சரி என்று கருதி, அவரது மனுவை தள்ளுபடி செய்தனர். இதனிடையே நடைபெற்ற விசாரணை யில் கோகுல்ராஜ் மற்றும் சுவாதி சந்தித்த அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஜனவரி 22 அன்று ஆய்வு செய்யப்போவதாக உயர்நீதி மன்ற நீதிபதிகள் கூறியிருந்தனர். இதனைத்தொடர்ந்து திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் ஜன வரி 22 அன்று ஆய்வு மேற்கொண்டனர். அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் உள்ள சிசிடிவி கேமிரா அமைந்துள்ள பகுதி யை ஆய்வு செய்தனர்.கோகுல்ராஜ் உடல் கிடந்த தொட்டிப்பாளையம் ரயில்வே தண்ட வாளப்பகுதியிலும் நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
குப்பைகளை பிரித்தெடுக்க பயோ-மைனிங் முறை
சென்னை, ஜன.22- சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதா வது: சென்னை பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5 ஆயிரத்து 100 டன் திடக் கழிவுகள் சேகரிக்கப்படு கிறது. இந்த திடக்கழிவுகள் மக்கும், மக்காத கழிவு களாக பிரிக்கப்பட்டு மறு சுழற்சி செய்யும் வகையில் பதனிடும் மையங்களுக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள கழிவுகள் பெருங்குடி மற்றும் கொடுங் கையூரில் உள்ள குப்பை கொட் டும் வளாகங்களில் கொட்டப் பட்டு வருகிறது. பெருங்குடி குப்பை கொட்டும் வளா கத்தில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வரும் குப்பை களை பிரித்தெடுக்க ரூ.354 கோடி மதிப்பீட்டில் பயோ- மைனிங் முறையில் பிரித்தெ டுத்து நிலத்தை மீட்டெடுக் கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் டிசம்பர் 2023-க்குள் நிறைவு பெறவுள்ளது. கொடுங்கை யூர் குப்பை கொட்டும் வளா கத்தில் கடந்த 40 ஆண்டு களுக்கும் மேலாக கொட்டப் பட்டு வரும் திடக்கழிவுகள் பயோ-மைனிங் முறையில் பிரிக்கப்பட்டு நிலத்தை மீட் டெடுக்கும் பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளது. இதற்காக ரூ.641 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. அத னடிப்படையில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த பணிகள் அண்ணா பல் கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வல்லு னர்களை உள்ளடக்கிய திட்ட கண்காணிப்பு குழு வின் மூலம் மேற்கொள்ளப் பட உள்ளது. இந்த பணிகள் 2 ஆண்டுகளுக்குள் நிறைவு பெற்று நிலம் மீட்டெ டுக்கப்படும்.
தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை, ஜன. 22- தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ள தாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தா மரைக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, திங்கட் கிழமை (ஜன. 23) தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட் டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசா னது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது. செவ்வாய்க்கிழமை (ஜன. 24) தென் தமிழ்நாடு மாவட்டங்கள், டெல்டா, அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பார்சல் சேவை நிறுத்தம்
சென்னை, ஜன. 22- குடியரசு தின விழா வரும் 26ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படு கிறது. அதையொட்டி விமான நிலை யங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் கோவில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்க ளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அங்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தில்லி செல்லும் அனைத்து ரயில்களிலும் அனைத்து வகையான பார்சல் சேவைகளும் திங்களன்று (ஜன. 23) முதல் 26ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு காரணங்க ளுக்காக முன் எச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அனைத்து ரயில்வே மண்டலங்களுக் கும் இந்திய ரயில்வே துறை உத்தர விட்டுள்ளது.
‘நீட் விலக்கு மசோதா குறித்து ஓரிரு வாரத்திற்குள் விளக்கம்’
சென்னை, ஜன. 22- நீட் விலக்கு மசோதா குறித்து ஆயுஷ் அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ள நிலை யில் இன்னும் ஓரிரு வாரத்திற்குள் விளக்கம் அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித் துள்ளார். சென்னையில் செய்தியாளர்களி டம் பேசிய அவர் கிண்டி கிங்ஸ் மருத்துவ மனையில் கட்டப்பட்டு வரும் அரசு பன்னோக்கு மருத்துவமனையை இரண்டாவது முறையாக ஞாயிற் றுக்கிழமை ஆய்வு மேற்கொண்ட முத லமைச்சர், பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், மாற்றுத்திறனாளி களுக்கானசாய்தளப் பாதை, தூய் மைப் பணியாளர்களுக்கான இடம், பசுமை இடமாக வளாகத்தை வைப்பது உள்ளிட்ட பணிகள் தற்பொழுது நடை பெற்று வருகிறது என்றார். நீட் விலக்கு மசோதா குறித்து ஆயுஷ் அமைச்சகம் விளக்கம் கேட்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஓரிரு வாரத்திற்குள் விளக்கம் அனுப்பி வைக்கப்படும் என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரி வித்தார்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரை விசாரிக்க குழு அமைப்பு
பாஜக எம்பி (உத்தரப்பிரதேசம்) பிரிஜ் பூஷன் சரண் சிங் (66) கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இவர் பல ஆண்டு களாக மல்யுத்த வீராங்கனைகள், புதிதாக பயிற்சிக்கு சேரும் சிறுமிகள், பெண் பயிற்சி யாளர்கள் என அனைவருக்கும் பாலியல் தொல்லை அளிப்பதாகவும், பிரிஜ் பூஷன் சிங்கிற்கு நெருக்கமாக இருக்கும் சில பயிற்சியாளர்களும் பாலியல் தொல்லை, மனதளவில் நெருக்கடி அளித்ததாகவும் இந்திய நட்சத்திர வீராங்கனையும், போகத் சகோதரிகளில் ஒருவருமான வினேஷ் போகத் குற்றம்சாட்டி, கடந்த புதன்கிழமை (18-ஆம் தேதி) முதல் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட மல்யுத்த வீரர் - வீராங்கனைகளு டன் குழுவாக தில்லி ஜந்தர் மந்தரில் தொட ர்ந்து 5 நாட்களாக போராடி வருகின்றனர். தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை பிரிஜ் பூஷன் சிங் மறுத்து வரும் நிலையில், பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை குழு அறிக்கையை சமர்ப்பி க்கும் வரை இந்திய மல்யுத்த சம்மேளனத் தின் (WFI) தலைவர் பொறுப்பு விவகா ரங்கள், இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) குழு மற்றும் கூட்டமைப்பின் விவகாரங் களில் இருந்து 4 வாரங்களுக்கு விலகி இருக்கு மாறு பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தர விட்டுள்ளது. போராட்டம் வாபஸ் பற்றி பேச்சு இல்லை பிரிஜ் பூஷன் சிங்கை இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் பொறுப்பில் இருந்து ஒதுக்கி வைத்து விசாரணை குழு அமைக்கப்படும் என ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சகம் கூறினாலும், மல்யுத்த வீரர் - வீராங்கனைகளின் போராட்ட வாபஸ் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாக வில்லை. (மாலை 5 மணி நிலவரம்)
42 நாட்களாக குறைந்த நூறு நாள் வேலைத் திட்டம் - முற்றாக முடக்க மோடி அரசு முயற்சி
புதுதில்லி, ஜன.22- மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 200 நாட்களுக்கு வேலை வழங்க வேண்டும். நாளொன்றுக்கு 600 ரூபாய் கூலி வழங்க வேண்டும் என்று சிஐடியு-அகில இந்திய விவசாயிகள் சங்கம்-அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்பு கள் கோரிக்கை வைத்து போராடி வரு கின்றன. ஆனால் உண்மையில் இந்த ஆண்டு 42 நாட்களுக்கே வேலை வழங்கப்பட்டிருக் கிறது. நாட்டில் ஒன்பது மாநிலங்களும், யூனி யன் பிரதேசங்களும் தங்களுக்கு ஒதுக்கப் பட்ட மனித நாட்களில் 70 விழுக்காடு அள விற்கே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளுடன் ஒப்பிடும் போது, இந்த நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் குடும்பத்தினருக்கு வேலை அளிக்கும் சராசரி நாட்கள் மிகவும் குறைந்து விட்டன. ஜனவரி 20 தேதியன்று, இந்த சராசரி வெறும் 42 நாட்களாகும். இது 2021-22ஆம் ஆண்டில் 50 நாட்களாகவும், 2020-21இல் 52 நாட்களாகவும், 2019-20இல் 48 நாட்களாக வும், 2018-19இல் 51 நாட்களாகவும் இருந்தது. இவ்வாறு வேலை செய்யும் நாட்கள் வீழ்ச்சி அடைந்ததற்கு, அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவது, வேலை கோரி வரும் ஆட்கள் குறைந்துவிட்டார்கள் என்பதாகும். ஆனால் கல்வியாளர்களும், செயற் பாட்டாளர்களும் இதனை ஏற்கவில்லை. இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசாங்கத்தால் ஒதுக்கப்பட வேண்டிய தொகை கணிச மாக வெட்டப்பட்டிருப்பதும், வேலை செய்த தொழிலாளர்களுக்கு ஊதியம் அளிக்கப்படா மல் இழுத்தடிப்பதுமே காரணங்களாகும் என்று அவர்கள் கூறுகிறார்கள். செய்த வேலைக்கு ஊதியம் தராமல் இழுத்தடிப்பது இவர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் அவர்கள் தெரிவிக் கின்றனர். இத்துடன் வேலைக்கு வருபவர்கள் வருகைப் பதிவிற்காக தேவையற்ற முறையில் செயலி (app) போன்று தொழில்நுட்ப சிக்கல்களையும் அறிமுகப் படுத்தியிருப்பது, தொழிலாளர்கள் மத்தி யில் சிரமங்களை ஏற்படுத்தி இருக்கிறது. நிதியாண்டு இன்னும் இரு மாதங்களில் முடியக்கூடிய நிலையில் நாட்டிலுள்ள ஒன்பது மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இதற்காக ஒதுக்கப் பட்ட நிதியில் இதுவரை சுமார் 70 விழுக்காடு அளவே செலவு செய்திருக்கின்றன. இந்த ஆண்டு ஊதியம் வழங்கப்படுவது 3, 4 மாதங்களுக்குத் தாமதமாகி இருக்கிறது என்றும், இதற்குத் தவறான நிதி நிர்வாகமே காரணம் என்றும், ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். (ந.நி.)